[மயில்சாயலாளுடன் நீங்கிய என்துயிலை இன்னும் மீளப் பெற்றிலேன். அக்குயில்மொழியாளின் கூந்தல் போன்று இருண்டு, அவள் வேற்கண்போலத் துன்பம் செய்து, இராப்பொழுது நீண்டு கொண்டிருக்கின்றது.]
இவற்றுள், ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ என்றல் மருள்உற்று உரைத்தற்கும், ஏனைய நான்கும் தெருள் உற்று உரைத்தற்கும உரிய. இனி ஒன்றென முடித்தலான், பிரிந்துழிக் கலங்கி நெஞ்சொடு கூறலும் வரப்பெறும். அதற்குச் செய்யுள்:
"இல்லோன் இன்பம் காமுற் றாஅங்கு,
அரிதுவேட் டனையே; நெஞ்சே! காதலி
நல்லள் ஆகுதல் அறிந்துஆங்கு
அரியள் ஆகுதல் அறியா தோயே". குறுந்-120
[வறியவன் இன்பத்தை விரும்பி வாடுவதுபோல நம் தகுதிக்கு அரியது ஒன்றை விரும்பும் நெஞ்சே! நம் காதலி நல்லாள் என்பதை அறிந்துள்ள நீ அவள் நமக்குக் கிடைத்தற்கு அரியவள் என்பதனை அறியாது இருக்கின்றனையே!]
502 தெய்வம் தெளிதல் கூடல் விடுத்தல்என்று
இவ்வோர் மூவகைத்து இடந்தலைப் பாடே.
இது நிறுத்தமுறையானே இடந்தலைப்பாட்டின் வகை இத்துணைத்து என்கின்றது.
இ-ள் தெய்வம் தெளிதலும் கூடலும் விடுத்தலும் என இடந்தலைப்பாடு மூவகையினை உடைத்து என்றவாறு.
|
|
|
|