அகத்திணையியல்-நூற்பா-130                              311


 

 விளக்கம்

 1 ["தலைவியை முன்பு அளித்த தெய்வம் இன்னும் தரும்" என்று
   தலைவன் தலைவியை முதல்நாள் கண்ட இடத்திற்குச் செல்லுதல்.

 2 தலைவியைத் தலைவன் முன்பு போலத் தனித்து நின்றதை நேரில்
   காணுதல்.

 3 தலைவியைத் தழுவுதல்.

 4 தலைவியின் அழகைப் புகழ்தல்.

 5 பாங்கியர்கூட்டத்தை அடையும்படிதலைவன் தலைவியை விடுத்தல்.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும் -                                         ந. அ. 135
 

    "சேறலில் தந்த தெய்வம் தரும்எனச்
     சேறல் காண்டல் சேர்தல் புகழ்தல்
     ஆயத்து உய்த்தலோடு ஐந்துஇடந் தலைஎன
     மேய பின்உறு புணர்ச்சியின் விரியே".

மா. அ. 27]

      தந்த தெய்வம் தரும் எனச்சேறல்:

    "என்அறி வால் வந்தது அன்றுஇது முன்னும்பின் னும்முயன்றால்
     மன்நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல், நெஞ்சே
     மின்எறி செஞ்சடைக் கூத்தப் பிரான் வியன் தில்லைமுந்நீர்ப்
     பொன்எறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழில்இடத்தே.
     

     எனவும்,                                             திரு. 49
 

     [மனமே! கூத்தப்பிரான் தில்லைக் கடல்துறையை அடுத்த பொழிற்கண்
 தலைவியைக் கூடும் வாய்ப்பு: முன்னும் என்அறிவால் முயன்று பெற்றது
 அன்று; இன்னும் அவ்வாய்ப்பு அளித்த தெய்வம் நமக்குக் கூட்டுவிப்பதற்கு
 உள்ளது; ஆதலின் வருந்தாதே]