அகத்திணையியல்-நூற்பா-131                              313


 


 அசைந்து தளரும் புருவவில், நிலைசோரும் ஆடை இவற்றை மனங்கொண்டு
 மகிழ்ச்சி மிகுதற்குக் காரணமான இன்ப வெள்ளத்தை விரும்பினோம்.]

     புகழ்தல்:

 "கனமே கருங்குழல், கங்குல்அன் றே; கண் கருவிளையின்
  இனமே, குவளையும் நெய்தலும் அல்ல; இவர்க்கு இடையென்
  மனமே, வளர்இள வஞ்சிஅன் றே;வஞ்ச மாறன்வைத்த
  தனமே தனம்,கன கத்தட மேருச் சயிலமன்றே".

அம்பி. 42
 

 எனவும்,

     [தலைவியின் கூந்தல் மேகமே; இருள்அன்று; கண்கள்
 கருவிளையே, குவளையும் நெய்தலும் அல்ல; இடை என்மனமாகிய
 அருவப்பொருளே, வஞ்சிக்கொடி அன்று: தனம் மன்மதனுடைய
 செல்வக்குவியலே, மேருமலை அன்று.]

    உடன்புணர் ஆயத்து உய்த்தல்:

 "சூளாமணிஉம்பர்க்குஆயவன்சூழ்பொழில்தில்லைஅன்னாய்க்கு
  ஆளாய் ஒழிந்ததுஎன் ஆருயிர் ஆரமிழ் தேஅணங்கே
  தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும்
  நாள்ஆர் மலர்ப்பொழில் வாய்எழில் ஆயம் நணுகுகவே".

திருக்கோவை 47
 


 எனவும் வரும்.

     [அமிழ்தே! அணங்கே! துளைஇடாத மணியே! மான்பிணையே!
 பலசொல்லுவது ஏன்? தில்லைஅன்ன உனக்கு என் உயிர் அடிமையாய்
 விட்டது. நீ இனி, பொழிலிடத்துநின்தோழியர் குழாத்தை அடைவாயாக.]

     இவற்றுள், தந்ததெய்வம் தரும் எனச் சேறல் ஆகிய ஒன்றும் தெய்வம்
 தெளிதற்கும், காண்டலும் முயங்கலும் புகழ்தலும் ஆகிய மூன்றும் கூடற்கும்,
 ஆயத்து உய்த்தல் ஆகிய ஒன்றும் விடுத்தற்கும் உரியவாம்.

      40