[என் உயிர்போல்வாய்! நீ கவலைப்படாதே. உன்னை விட்டு நீங்கேன்
என்று தண்ணளி செய்து போன என்உயிர் போன்ற தலைவர் என்னைக்
கூடுதற்கு விதுப்புற்று, அம்பலத்தில் எம் உயிராக விளங்கும் சிவபெருமான்
பயிலும் இக்கயிலாய மலைப்பகுதியில் என் உயிர்த்தோழியர் விளையாடும்
இடத்திற்கு வந்து விடுவாரோ?]