[வாள்கண், பூண்முலை, வாள்நுதல், அரவுஅல்குல் இவற்றை உடைய
தலைவி காக்கும் தினைப்புனம், யான் அவளை அகன்றால்
பொய்உடையார்க்கு அரன் துன்பத்தைச்
செய்துசேயன் ஆமாறுபோல மிக்க
துயரத்தைச்செய்து எனக்குச் சேய்த்தாம்; இவளை அணைந்தால்
மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் பேரின்பத்தைச் செய்து அணித்து
ஆமாறுபோலப் பேருவகை செய்து எனக்கு மிகவும் அணித்தாம்] 131