[கோம்பிக்குப் பயந்து இரை உண்ணாத மயில், யானையையும் கொல்லும் ஆற்றல் உடையபாம்பைப் பிடித்து அதன் படத்தைக் கிழித்தாற் போல, முலைப்பாரம் தாங்காது நையும் இடையை உடைய தலைவி சிவபெருமான் திருவடித் தாமரைகளையே சூடும் என் ஆற்றலைப்போக்கிவிட்டாள்.]
"உளமாம் வகைநம்மை உய்யவந்து ஆண்டுசென்று உம்பர்உய்யக
களமாம் விடம்அமிழ்து ஆக்கிய தில்லைத்தொல் லோன்கமிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றுஓர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததுஎன் றோஇன்றுஎம் அண்ணல் இரங்கியதே".
[நம்மை ஆட்கொண்டு தேவர் உய்யவிடம் உண்ட சிவபெருமானுடைய கயிலை மலைச்சோலையில் வஞ்சிக்கொடி போன்ற இடையைஉடைய இளைய மான் விழித்ததுகண்டோ அண்ணலாகிய நீ மனம் தளர்ந்து இருக்கின்றாய்?]
கிழவோன் கழற்றுஎதிர் மறுத்தல்:
"சேணில்பொலிசெம் பொன்மாளிகைத் தில்லைச்சிற்றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும்
பூணின்பொலி கொங்கை ஆவியைஓவியப்பொற் கொழுந்தைக்
காணின் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே".
[செம்பொன் மாளிகைத் தில்லையிலுள்ள கூத்தப்பிரானின் கயிலை மலையில் தங்கியிருந்த என் உயிர் போன்ற ஓவியக் கொழுந்தை நீ கண்டிருந்தால் இப்படி என் கருத்தை மறுத்துப்பேசத் துணியாய், காணாததனால் அன்றோ இவ்வாறு பேசுகிறாய்?]
|
|
|
|