"இளங்கொம்பு ஒருதனி நின்றுஇருஞ் சாரலின் என்னைஇங்ஙன்
உளங்கொண்டு உறுதுயர் செய்ததுஎன்றாய்விண் ஒளிரும மின்போல்
விளங்கும் கதிர்வடி வேல்அண் ணலேதென்றல் மீதுஅசையத்
துளங்கும் சிறுகொடிக் கோமத வேழம் துவக்குஉண்டதே."
[அண்ணலே! "மலைப்பகுதியில் இளங்கொம்பு ஒன்று என் உள்ளத்தைக் கைப்பற்றி மிக்கதுயரைத் தருகின்றது" என்று நீ கூறுவது, தென்றலுக்கு அசையும் சிறுகொடி மதயானையைககட்டும் ஆற்றலைப் பெற்றது போன்ற செய்தியாகும்.]
கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல்:
"தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தன்என்று
மலைத்துஅறி வார்இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
கலைச்சிறு திங்கள் மிலைந்தசிற் றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யால்அழி வுற்று மயங்கினனே".
[இதற்கு முன் தலைமையான அமைதி தளராது இருந்தேன். நான் மனம் மயங்கினவன் என்று ஒருவரும் என்னைக் கூறியவர் இலர். பிறர் கொண்ட கலக்கங்களையும் யான் தெளிவித்துள்ளேன். ஆனால் இன்று சிற்றம்பலவனுடைய கயிலை மலைக்கண் கண்டதலைவியின மான்விழியால் மனம் அழிந்து மயங்கிவிட்டேன்.]
பாங்கன் தன்மனத்து அழுங்கல்:
"யானாம் அறிவு கொளுத்துகிற் பேன்இங்ஙன் ஏறுஅனையான்
தானாம் அறிவும் தளர்ந்துநிற் பான்செந் தளவுஅரும்பும்
|
|
|
|