தேனாம் இனிய குதலைச்செவ் வாய்இளஞ் செவ்விநவ்வி
மானாம் இவனை மயங்கஇவ் வாறு வருத்துவதே".
[முத்துப் போன்ற பற்கள், மழலை பேசும் செவ்வாய், மான்விழி இவற்றை உடையாள் தன்னை மயக்க, இவன் வருந்துகின்றானே! இவனுக்கு யானோ அறிவுரை கூற வல்லேன்? இவனா இப்படி அறிவு தளரக்கூடியவன் யாவும் வியப்பாய் உள்ளன.]
"ஆலத்தி னால்அமிர்து ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல்
கோலத்தி னாள்பொருட் டாக அமிர்தம் குணம்கெடினும்
காலத்தி னால்மழை மாறினும் மாறாகக் கவிகைநின்பொன்
சீலத்தை நீயும் நினையாது ஒழிவதுஎன் தீவினையே".
[அமிர்தம் குணம் மாறினும் பருவமழை பொய்ப்பினும் தவறாத கொடைத் தன்மையைஉடைய நீ, விடமுண்ட சிவபெருமான் அம்பலம்போன்ற வனப்பினாள் காரணமாக நின் பொன்போன்ற அரிய ஒழுக்கத்தை அறியாது மயங்குவது என் தீவினைப்பயனேயாம்.]
எவ்விடத்து எவ்வியற்று என்றல்:
"நின்னுடை நீர்மையும் நீயும்இவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மைஇதுஎன் என்பதேதில்லை ஏர்கொள்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா
என்இடம்யாது இயல் நின்னைஇன்னே செய்தஈர்ங்கொடிக்கே".
|
|
|
|