விடம்கால் அயில்கண்ணிமேவும்கொலாம்தில்லைஈசன் வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில் நீழல்அம் தண்புனத்தே".
திருக்கோவை 31
[தில்லையான் மலையில் பொழில் நீழலில் தண்புனத்தே, மலைகளும் உலகுகளும் அழகு குன்றும் அன்றும் நடுங்காதவனை நடுங்கச்செய்த வேற்கண்ணி பொருந்தி இருப்பாளோ?]
"வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்
துடிக்கின்றவாவெற்பன்சொல்பரிசேயான் தொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்கு அம்பலம்போல்
படிச்சந்த மும்இது வேஇவ ளேஅப் பணிமொழியே".
திருக்கோவை 32
சிவபெருமானுடைய அம்பலம் போன்ற ஒப்பும் இதுவே. இவளே தலைவன் குறிப்பிட்ட தலைவி ஆவாள்.]
பாங்கன் இகழ்ந்ததற்கு இரங்கல்:
"பண் ஆர்பணிமொழிவண்ணமும்தண்ணறும்பைங்குவளைத்
கண்ணால் உரைசெய்த காதலும் காமக் கனல்கொளுத்திப்
புண்ணான நெஞ்சமும் தஞ்சம்இல் லாதவன் வன்பொறையும்
எண்ணாது அருவினை யேன்இகழ்ந் தேன்எம் இறைவனையே".
அம்பி. 62
[இத்தலைவியின் வனப்பினையும், அவள் கண்ணால் உரைத்த காதலையும், காமக்கனலால் புண்ணான தலைவன் நெஞ்சத்தினையும், அவன் பொறுமையையும் எண்ணாது, யான்தலைவனை இகழ்ந்தேனே.]
|
|
|
|