"குவளைக் களத்துஅம் பலவன் குரைகழல் போல்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்று ஆண்ட அவயவத்தின்
இவளைக் கண்டு இங்குநின்று அங்குவந்து அத்துணை யும்பகர்ந்த
கவளக்களிற்று அண்ணலே திண்ணியான் இக்கடலிடத்தே".
திருக்கோவை 33
[நீலகண்டனான சிவபெருமானின் திருவடிபோன்ற தாமரையில் வாழும் திருமகளை வென்ற உறுப்பு அழகினை உடைய இவளைக்கண்டு இவ்விடத்தைவிட்டு என்பால் வந்து இவ்வளவும் உரையாடிய நம் தலைவனே இவ்வுலகில் மன உறுதி உடையவன் ஆவான்.]
"துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர் நுண்தாது போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்கயல்கண் செய்த
உறைமலிஉய்யாநோய்ஊர்சுணங்கின்மென்முலையேதீர்க்கும் போலும்"
சிலப். கானல். 8
[வலம்புரி மணலை உழுத சுவடு மாறும்படிப் புன்னைப்பூ உதிர்ந்து நுண்ணிய மகரந்தம் மூடும் கடற்கரைச் சோலையில், தலைவியின் மதிமுகத்துக் கயற்கண்கள் தலைவனுக்குசசெய்துள்ள நோயை, அவள் மென்முலையே தீர்க்கும் போலும்.]
தலைவன் தனக்குத் தலைவி நிலைகூறல்:
"பணம்தாழ் அரவுஅரைச் சிற்றம்பலவர்பைம் பொன்கயிலைப்
புணர்ந்து ஆங்கு அகன்ற பொருகரி உன்னிப் புனத்துஅயலே 42
|
|
|
|