மணம்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய்
நிணம்தாழ் சுடர்இலை வேலகண் டேன்ஒன்று நின்றதுவே."
திருக்கோவை 34
[வேல! சிற்றம்பலவன் கயிலையிலே புணர்ந்து அகன்ற களிற்றை உன்னிப் புனத்து அயலே பொழிற்கண் கண்பரப்பிப் பிடி ஒன்று நின்றதனைக் கண்டேன்.]
"எயில்குலம் மூன்றுஇருந் தீஎய்த எய்தவன் தில்லைஒத்துக்
குயில்குலம் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர்முத் தம்நிரைத்து
அயில்குல வேல்கம லத்தில் கிடத்தி அனம்நடக்கும்
மயில்குலம் கண்டது உண்டேல்அது என்னுடைமன் உயிரே".
திருக்கோவை 36
[திரிபுரம் எரித்த சிவபெருமான் தில்லையை ஒத்து, குயில் ஒலிகொண்டு, தொண்டைக்கனி போன்ற வாயில் முத்துப்போன்ற பற்கள் பொருந்த, வேல் கமலத்தில் கிடப்ப, அன்னம்போல நடக்கும் குலமயில் உண்டாயின் அதுவே என் உயிராம்.]
"மறக்கும் பரிசுஅறி யாவண்டல் ஆயம் மறந்துவந்து
சிறக்கும் கமலத் திருநின்ற வாசெங்கண் முத்துஅரும்ப
நிறக்கும்பசலையும்மேனியுமாய்நெஞ்சில்நீடுஉயிர்ப்பும்
பிறக்கும் பெருநல னும்மடம் நாணும் பிணங்கவிட்டே".
அம்பி 66
[மறத்தல் அறியாத தோழியர்கூட்டத்தை மறந்துவந்து கண்களில் முத்து அரும்ப, மேனியில் பசலை பாய, பெருமூச்சு விட்டு, நலனும் நாணும் மடனும் பிணங்கவிட்டுத் திருமகள் போன்ற தலைவி நிற்கின்றவாறு என்னே!]
|
|
|
|