"வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்".
"மெய்வாய்கண்மூக்குச் செவிஎன்னும் நாமங்கள் மேவப்பெற்ற
ஐவா யினும்நின்று அருந்தின ரோஅருந் தானவர்முன்
உய்வான்மலைகொண்டுஒலிநீர் கடைந்தஅன்றும்பர்என்போல்
மைவார் அளக மடந்தைநின் போலும் மருந்தினையே".
[விரும்பிய பொழுதில் அவ்வவ் விரும்பிய பொருள்களைப் பெற்றாற் போலும், இப்பூவணிந்த கூந்தலாள் தோள்கள்.
தலைவியே! தேவர்கள் உய்ய மலைகொண்டு பாற்கடல் கடைந்த அன்று அவர்கள் உன்னைப் போன்ற மருந்தினை என்னைப்போல ஐம்பொறிகளானும் நுகர்ந்தனரோ!]
"தழல்கண்டது அன்ன கலிவெம்மை ஆறத்தன் தண்ணளியால்
நிழல்கண்ட சந்திர வாணன்தென் மாறை நிலவுஉமிழும்
கழல்கண்டது அன்ன கதிர்முத்த மாளிகைக் காரிகைநின்
குழல்கண்ட பின்அல்ல வோஅறல் நீருள் குளித்ததுவே".
[கலியின் வெம்மை நீங்கத் தன்கருணையால் நிழல்செய்த சந்திரன் மகனாகிய வாணன் மாறையிலே, ஒளிவீசும் முத்த மாளிகைக்கண் அமரத்தக்க காரிகையே! உன் கூந்தல் அழகைக் கண்டபின் வெளிப்படத் தோன்றும் விருப்பினை விடுத்துக் கருமணல் நீரில் முழுகிவிட்டது.]
|
|
|
|