338                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பாக்கள்  

    "குறையுற உணர்தல் முன்னுற உணர்தல்
     இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்என
     மதியுடம் படுத்தல் ஒருமூன்று ஆகும்".

தொ. பொ. 127

    "அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது
     பின்னிலை முயற்சி பெறாஅள்என மொழிப".

128

    "முயற்சிக் காலத்து அதற்பட நாடி
     புணர்த்தல் ஆற்றலும் அவள்வயி னான".

129

முழுதும்- இறை. அக. 7

    "முன்னுற உணர்தல் குறையுற உணர்தல்
     இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்என்று
     ஒருமூன்று வகைத்தே பாங்கிமதி உடன்பாடு".

ந. அ. 138

    "மதியுடன் படல்ஒரு மூன்றன் வகையே
     முன்னுற உணர்தல் குறையுற உணர்தல்
     இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்
     ஆம்நெறித்து என்பர் அறிவுடை யோரே."

மா. அ. 30

134

பாங்கிமதி உடன்பாட்டு விரி 

 507 நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
     செய்வினை மறைப்பும் செலவும் பயில்வும்என்று
     இவ்வகை ஏழினும் ஐயம்உற்று ஓர்தலும்1
     அவ்வகை தன்னால் ஐயம் தீர்தலும்2
     மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
     பல்வேறு கவர்பொருள் சொல்லின் ஆடலும்3
     பெட்டவாயில்பெற்று இரவுவலி யுறுத்தோன்
     கண்ணியும் தழையும் ஏந்தி நண்ணி