[வான் அளாவிய இக்குன்றில், பூங்குழல் தோழியே! நேற்று நின்னை  விடுத்து யான் குளித்த  சுனையில் வண்டுகள் என்மேல் மொய்த்ததனால்  உடல் வாடி விட்டது. யான் வருந்திய காரணம்  அதுவே; பிறிதுஇல்லை,]  
    "நீலம் பவளம் படரப் பவள நிறம்தரளக் 
     கோலம் புனைய நுதல்குறு வேர்வுஎழக் கோமளமே 
     போலும் திருநிறம் பொன்நிற மாகப் புனைசுனைநீர் 
     ஏலம் தருகுழ லாய்கிடை யாதுகொல் எங்களுக்கே". 	
  
     [ஏலம்கமழ் குழலீ! நின் கண்கள் சிவக்கவும், உதடுகள் வெளுக்கவும்  நெற்றியில் வியர்வை  துளிக்கவும், நின் நிறம் பொன் நிறமாகவும், நின்னைச்  சுனைநீர் மாற்றிவிட்டது. இம்மாற்றத்தை  எங்களுக்கு ஏற்படுத்தவில்லையே!]
  
    "பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத் 
     தரும்கண் ணுதல்தில்லை அம்பலத் தோன்தட மால்வரைவாய்க் 
     கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பக்கண் ஆர்அளிபின் 
     வரும்கள்மா லைமலர் சூட்டவற்றோ மற்றுஅவ் வான்சுனையே". 	
  
     [காமனை எரித்த தில்லையான் மலையில் நீ ஆடியசுனை நின்  கருங்கண் சிவப்பச் செவ்வாய் விளர்ப்ப வண்டுமொய்க்கும் மாலையை  நினக்குச் சூட்டும் ஆற்றல் உடையதோ?]  
 "செந்நிற மேனிவெண்ணீ றணிவோன் தில்லை அம்பலம்போல் 
  அந்நிற மேனிநின் கொங்கையில் அங்குஅழி குங்குமமும் 
  
 |   
  |  
  
							 | 
						 
					 
				 |