அகத்திணையியல்-நூற்பா-135                              351


 

     [வான் அளாவிய இக்குன்றில், பூங்குழல் தோழியே! நேற்று நின்னை
 விடுத்து யான் குளித்த  சுனையில் வண்டுகள் என்மேல் மொய்த்ததனால்
 உடல் வாடி விட்டது. யான் வருந்திய காரணம்  அதுவே; பிறிதுஇல்லை,]

     கரவு நாட்டம்:

    "நீலம் பவளம் படரப் பவள நிறம்தரளக்
     கோலம் புனைய நுதல்குறு வேர்வுஎழக் கோமளமே
     போலும் திருநிறம் பொன்நிற மாகப் புனைசுனைநீர்
     ஏலம் தருகுழ லாய்கிடை யாதுகொல் எங்களுக்கே".

அம்பி. 77

 எனவும்,

     [ஏலம்கமழ் குழலீ! நின் கண்கள் சிவக்கவும், உதடுகள் வெளுக்கவும்
 நெற்றியில் வியர்வை  துளிக்கவும், நின் நிறம் பொன் நிறமாகவும், நின்னைச்
 சுனைநீர் மாற்றிவிட்டது. இம்மாற்றத்தை  எங்களுக்கு ஏற்படுத்தவில்லையே!]

     சுனைவியந்து உரைத்தல்:

    "பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
     தரும்கண் ணுதல்தில்லை அம்பலத் தோன்தட மால்வரைவாய்க்
     கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பக்கண் ஆர்அளிபின்
     வரும்கள்மா லைமலர் சூட்டவற்றோ மற்றுஅவ் வான்சுனையே".

திருக்கோவை. 70

 எனவும்,

     [காமனை எரித்த தில்லையான் மலையில் நீ ஆடியசுனை நின்
 கருங்கண் சிவப்பச் செவ்வாய் விளர்ப்ப வண்டுமொய்க்கும் மாலையை
 நினக்குச் சூட்டும் ஆற்றல் உடையதோ?]

     நாண நாட்டம்:

 "செந்நிற மேனிவெண்ணீ றணிவோன் தில்லை அம்பலம்போல்
  அந்நிற மேனிநின் கொங்கையில் அங்குஅழி குங்குமமும்