352                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

  மைந்நிற வார்குழல் மாலையும் தாரும் வளாய்மதம்சேர்
  இந்நிற மும்பெறின் யானும் குடைவன் இருஞ்சுனையே".

திருக்கோவை. 69

 எனவும்,

     [சிவபெருமானுடைய அம்பலம் போன்ற உன் மேனியில் கொங்கையில்
 அழியும் குங்குமமும்,  குழற்குமாலையும், தாரும், இப் புதுநிறமும்,
 அமைந்துள்ளமை போல, யானும் பெறும் வாய்ப்பு  உண்டாயின்,
 யானும் அச்சுனையில் குடைவேன்.]

     நடுங்க நாட்டம்:

 "ஆஆ இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
  மூவா யிரவர் வணங்கநின் றோனைஉன் னாரின்முன்னித்
  தீவாய் உழுவை கிழித்ததுஅந் தோசிறி தேபிழைப்பித்து
  ஆஆ மணிவேல் பணிகொண்ட வாறுஇன்றுஓர் ஆண்தகையே".

திருக்கோவை. 72

 எனவும்,

     [பிரமனும் மாலும் அறியாத அடிகளைத் தில்லைவாழ் அந்தணர்
 வணங்குமாறு நிற்கும்  பெருமானை நினையாதவரைப் போலத் துன்பம்
 உறுமாறு, ஓர் ஆண்தகையைப் புலியொன்று  கிழிக்க வரக் கணநேரத்தில்
 தன் வேலை அதன்மேல் பாய்ச்சி அவன் உயிர் பிழைத்தான்.]

     இதுவும் அது:

    "பண்டுஇப் புனத்துப் பகலிடத்து ஏனலுள்
     கண்டுஇக் களிற்றை அறிவன்மன்-திண்டிக்
     கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய்
     உதிரம் உடைத்து இதன் கோடு". சிற்றெட்டகம்.

 எனவும் வரும்.

     இன்னோரன்ன காட்டின், இறந்துபாடு பயத்தலான் வழிநிலை
 பிழைத்தனவாம் ஆதலின்,  ஈண்டைக்கு ஏலாஎன மறுக்க.