356                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 ஒருங்குஅளி ஆர்ப்ப உமிழ்மும் மதத்துஇரு கோட்டுஒருநீள்
 கருங்களி ஆர்மத யானைஉண் டோவரக் கண்டதுவே".

திருக்கோவை. 52

 எனவும்,

     [யான் மகிழுமாறு தன்னைப் பணிபவருக்கு இன்பம் அளித்து அனலில்
 ஆடும் தில்லையான் மலையில், மதத்தில் வண்டுகள் அமர்ந்து ஒலிப்ப ஒரு
 மதயானை இப்பக்கம் வந்தததனைக் கண்டீரோ?]

     மரை வினாதல்:

    "நறைபரந்த சாந்தம் அறஎறிந்து நாளால்
     உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல்-பிறைஎதிர்ந்த
     தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
     ஏமரை போந்தன ஈண்டு".

திணைமாலை 1

 எனவும்,

     [சந்தன மரங்களை வெட்டி நிலம் திருத்தி விதைத்த தினைப்புனத்தில்,
 பிறையை மேலேகொண்ட தாமரைபோன்ற முகத்தை உடைய தாழ்குழலீர்!
 அம்பு தன்மேல் புதையுண்ட மான்கள் இப்பக்கம் வந்தனவற்றைக்
 காணவில்லையா?]

     கலைமான் வினாதல்:

 "கருங்கண் ணனைஅறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய்
  வரும்கள் நனையவண்டு ஆடும் வளர்இள வல்லிஅன்னீர்
  இருங்கண் அனைய கணைபொரு புண்புணர் இப்புனத்தின்
  மருங்கண் அனையதுஉண் டோவந்தது ஈங்குஒரு வான்கலையே."

திருக்கோவை. 53

 எனவும்,

     [திருமால் அறியாதபடி நின்ற சிவபெருமானுடைய பொழிலிலே
 வண்டுகள் சூழும் கொடிபோல்வீர்! இங்கு இப்பக்கல் உம் கண்கள்போன்ற
 அம்புகள்பட்ட புண்ணோடு கலைமான் ஒன்று வந்தது உண்டோ?]