"தங்குறிப்பி னோரும் தலைச்சென்று கண்டக்கால்
எங்குறிப்பின் நோம்என்று இகழ்ந்திரார்-நும்குறிப்பின்
வென்றி படர்நெடுங்கண் வேய்த்தோளீர் கூறீரோ
வன்றி படர்ந்த வழி"
எனவும் வரும். வன்றி - பன்றி.
[தம் செயலில் ஈடுபட்டாரும், ஒருவர் தம்மைக் காண வருவாராயின், தம் செயல் கெடுமே என்று வந்தவரை வினாவாது இகழ்ந்து" வாளா இருக்கமாட்டார்கள். அவ்வாறாக, நெடுங்கண் வேய்த்தோளீர்! பன்றிஒன்று இப்பக்கல் சென்ற வழியை நீர் கூறீரோ?]
"கனம்வந்து இறைஞ்சும் கடம்பா டவியர் கருணைஎன்னத்
தனம்வந்து அரும்பும் சுரிகுழ லீர்என் சரத்தொடுமான்
இனம்வந்த தோவந்த மான்பிணை தேடிஇளைத்துமற்றுஎன்
மனம்வந்த தோஉரை யீர்உங்கள் காவல் மலிபுனத்தே".
[மேகம் தாழும் கடம்பமரக் காட்டினை உடைய சிவ பெருமானுடைய அருள்போல, முலைமுகம் செய்துள்ள நங்கையரே! நீங்கள் காக்கும் இப்புனத்திற்கு என் அம்போடு மான் ஒன்று வந்ததோ? அம்மானைத் தேடி இளைத்து என் மனம் வந்ததோ? கூறுவீராக]
"சிலம்புஅணி கொண்டசெஞ் சீறடி பங்கன்தன் சீர்அடியார்
குலம்பணி கொள்ள எனைக்கொடுத்தோன்கொண்டு தான்அணியும்
கலம்பணி கொண்டுஇடம் அம்பலம் கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்புஅணி கொண்டநும் சீறூர்க்கு உரைமின்கள் செல்நெறியே".
|
|
|
|