[பார்வதிபங்கனாய்த் தன்அடியார்க்கு என்னை அடியவன் ஆக்கிப் பாம்பினை அணிகலனாக அணிந்து அம்பலத்தான் ஆகும் சிவபெருமானின் கயிலைச் சிலம்பில் உள்ள உம்சீறூருக்குச் செல்லும் வழியைக் கூறுங்கள்.]
"இரதம் உடைய நடம்ஆட்டு உடையவர் எம்உடையவர்
வரதம் உடைய அணிதில்லை அன்ன வரிப்புனத்தார்
விரதம் உடையர் விருந்தொடுபேச்சின்மை மீட்டு அதுஅன்றேல்
சரதம் உடையர் மணிவாய் திறக்கின் சலக்குஎன்பவே"
[சுவையான நடனம் ஆடும் சிவபெருமானுடைய தில்லை அன்ன இப்புனத்தார்கள், ஒன்று, "விருந்தினரோடு பேசுதல் கூடாது" என்ற விரதம் உடையவர் ஆதல் வேண்டும்; இன்றேல், தம்வாயைத் திறந்தால் முத்துக்கள் சலக்கு என்ற ஓசையோடு உதிர்ந்துவிடும் என்று கருதுபவர் ஆதல் வேண்டும்.]
"கலைக்கீழ் அகல்அல்குல் பாரம்அது ஆரம்கண் ஆர்ந்துஇலங்கும்
முலைக்கீழ்ச் சிறிதுஇன்றி நிற்றல்முற் றாதுஅன்று இலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணைஅன்ன கண்ணீர் ஏதுநுங்கள் சிற்றிடையே"
[மேகலையின்கீழ் அல்குல்உளது; முலைக்குகீழ் அல்குலுக்கு மேல் சிறிதாவது இடம்இல்லாது இணைதல் இயலாது. இராவணன் ஆற்றலை ஒடுக்கிய சிவபெருமானுடைய கயிலையிலே, வில்லின் கீழ்உள்ள அம்புபோன்ற கண்ணீர்! "நும் சிறிய இடை எது?" என்பதைக் கூறுங்கள்.]
|
|
|
|