378                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [கடலில் மீன்பிடிக்கும் படகைச் செலுத்துவேனோ, அன்றி மீன்
 பிடிப்பேனோ, முத்துக் குளிப்பேனோ, அரன்தில்லை முன்றிலில் உங்களுக்கு
 வளைகளுக்காகச் சங்குகளைக் கொணர்ந்து கொடுப்பேனோ? உம்
 அண்ணன்மார் இடும் குற்றேவல்களைச் செய்வேனோ? உங்கள் கூந்தலில்
 சூட்டிக் கொள்ளப் பூக்களைத் தொடுப்பேனோ? கூறுவீர்களாக]

     பாங்கி குலமுறை கிளத்தல்:

    "தெங்கம் பழம்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
     கொங்குஅம்பழனத்துஒளிர்குளிர் நாட்டினைநீஉமைகூர்
     பங்குஅம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச்
    சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமிஎம் தேமொழியே "

     

திருக்கோவை 100 

 எனவும்,

     [தேங்காய், கமுகுக்குலைகளை மோதி வாழைக் கனிகளைத் தாக்கி
 வயலில் விழும் மருதநிலத்தினன் நீ; சிவபெருமானுடைய பரங்குன்றில்
 யானைகள் நடுங்கச் சிங்கம் திரியும் சீறூர்ச் சிறுமி எம் தலைவி.]

     தலைவன் தன்னை உயர்த்தல்:

    "மாடம்செய் பொன்நக ரும்நிகர் இல்லைஇம் மாதர்க்குஎன்னப்
     பீடம்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை உள்ளலரைக்
     கீடம்செய்து என்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக்
     கூடம்செய் சாரல் கொடிச்சிஎன் றோநின்று கூறுவதே "

திருக்கோவை 129 

 எனவும்,

     [தன்னை நினையாதவர்களைப்
 புழுப்போலத் துடிக்கச்செய்து, என்பிறவித் துயரைப் போக்கிய தில்லையான்
 கயிலைச்சாரலில், தேவர் உலகத்தாரும் தனக்கு நிகரில்லை என்னுமாறு
 பிரமனால் படைக்கப்பட்ட இத்தலைவியைக் குறிஞ்சிநிலப் பெண் என்று
 குறைவாகப் பேசலாமா?]