[கடலில் மீன்பிடிக்கும் படகைச் செலுத்துவேனோ, அன்றி மீன் பிடிப்பேனோ,
முத்துக் குளிப்பேனோ, அரன்தில்லை முன்றிலில் உங்களுக்கு வளைகளுக்காகச் சங்குகளைக்
கொணர்ந்து கொடுப்பேனோ? உம் அண்ணன்மார் இடும் குற்றேவல்களைச் செய்வேனோ? உங்கள் கூந்தலில்
சூட்டிக் கொள்ளப் பூக்களைத் தொடுப்பேனோ? கூறுவீர்களாக] பாங்கி குலமுறை கிளத்தல்:
"தெங்கம் பழம்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
கொங்குஅம்பழனத்துஒளிர்குளிர் நாட்டினைநீஉமைகூர்
பங்குஅம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச்
சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமிஎம் தேமொழியே "
[தேங்காய், கமுகுக்குலைகளை மோதி வாழைக் கனிகளைத் தாக்கி வயலில் விழும்
மருதநிலத்தினன் நீ; சிவபெருமானுடைய பரங்குன்றில் யானைகள் நடுங்கச் சிங்கம் திரியும் சீறூர்ச் சிறுமி எம் தலைவி.] தலைவன் தன்னை உயர்த்தல்:
"மாடம்செய் பொன்நக ரும்நிகர் இல்லைஇம் மாதர்க்குஎன்னப்
பீடம்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை உள்ளலரைக்
கீடம்செய்து என்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக்
கூடம்செய் சாரல் கொடிச்சிஎன் றோநின்று கூறுவதே "
எனவும்,
[தன்னை நினையாதவர்களைப் புழுப்போலத் துடிக்கச்செய்து, என்பிறவித் துயரைப்
போக்கிய தில்லையான் கயிலைச்சாரலில், தேவர் உலகத்தாரும் தனக்கு நிகரில்லை என்னுமாறு பிரமனால்
படைக்கப்பட்ட இத்தலைவியைக் குறிஞ்சிநிலப் பெண் என்று குறைவாகப் பேசலாமா?]
|
|
|
|