அகத்திணையியல்-நூற்பா-137                              379


 

     பாங்கி அறியாள்போன்று வினாதல்:

     "விண்இறந் தார்நிலம் விண்டவர் என்றுமிக் கார்இருவர்
     கண்இறந் தார்தில்லை அம்பலத் தார்கழுக் குன்றில்நின்று
     தண்நறுந் தாதுஇவர் சந்தனச் சோலைப்பந்து ஆடுகின்றார்
     எண்இறந் தார்அவர் யார்கண்ண தோமன்ன நின்அருளே"

திருக்கோவை 107 

எனவும்,

     [மன்ன! பிரமனும் திருமாலும் காணமுடியாத சிவபெருமான் தங்கும்
 கழுக்குன்றில் சந்தனச்சோலையில் பந்தாடும் எண்ணிறந்த மங்கையருள் உன்
 அருள் யார்மாட்டு உள்ளது?]

     இறையோன் இறைவி தன்மை இயம்பல்:

    "குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றைகொவ்வைசெவ்வாய்
     கவவின வாள்நகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர்
     தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம் பலம்அனையாட்கு
     உவவின நாள்மதி போன்றுஒளிர் கின்றது ஒளிமுகமே".

திருக்கோவை 108 

எனவும்,

     [அடியார் வினைகளை மிகவும் தீர்க்கும்
 சிவபெருமானுடைய சிற்றம்பலம் அனையாட்குக் கொங்கை குரும்பை
 போல்வன; குழல் கொன்றை போல்வது; செவ்வாய்நகை முத்துப்போல்வன;
 கண் கழுநீர் போல்வன; முகம் நிறைமதிபோல ஒளி வீசுவதாம்.]

     பாங்கி தலைவி அருமை சாற்றல்:

    "நெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறைப்
     புதுவை ஆகலின் கிளத்தல் நாணி
     நேர்இழை வளைத்தோள் நின்தோழி செய்த
     ஆர்அஞர் வருத்தம் களையா யோஎன