அகத்திணையியல்-நூற்பா-137                              381


 

     பாங்கி நின்குறை நீயே சென்று உரை என்றல்:

 "அந்தியின் வாய்எழி லம்பலத்து எம்பரன் அம்பொன்வெற்பில்
  பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடும்கடுவன்
  மந்தியின் வாய்க்கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம்கனிய
  முந்தி நின்வாய்மொழி நீயேமொழிசென்று அம்மொய்குழற்கே"

திருக்கோவை. 99 

 எனவும் வரும்,

     [செவ்வான மேனியன்ஆகிய அம்பலன் மலையிலே, மந்தியின்வாயில்
 பலாச்சுளைகளைத் தேனோடும் கடுவன் கொடுத்துக் காக்கும் சிலம்பனே!
 தலைவியின் மனம் கனியுமாறு உன்கூற்றை நீயே சென்று அவட்குக் கூறு.]

     பாங்கியைத் தலைவன் பழித்தல்:

    "மாதர் குறைமுடிக்க வல்லாமை வல்லைஎனக்
     காதல் சிறப்பக் கருதியது-மேதகைய
     பாம்பு அடுதேர் அல்குல் பயம்படுநீர் மானமான்
     தேம்படுதேர் மீது செலல்".

சிற்றகத்தியம் 

 எனவரும்.

     [தோழியே! தலைவியின் பொருட்டு யான் வேண்டுவதனை முடிக்கும்
 ஆற்றல் அற்ற உன்னைத் தக்கவள் என்று அன்பு சிறக்கக் கருதியது, மான்
 கானல் நீரை உண்மையான நீர் என்று கருதிச் செல்வதனை ஒக்கும்]

     பாங்கி பேதைமை ஊட்டல்:

    "நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
     வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி-எறிந்துழுது
     செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
     நொந்துஇனைய வல்லளோ நோக்கு."

 எனவரும்.

திணைமாலை. 24