[தலைவனே! "தகரம் மகிழ் முதலிய நறுமண மரங்களை வெற்றுப் புதர் போலக் கொண்டு வெட்டிஎறிந்து அவ்விடத்தை உழுது தினை விதைப்பார் மரபில் வந்துள்ள தலைவி பிறர் துன்பம் கண்டு மனம் நோகும் இயல்பினள் ஆவளோ?" என்பதனை ஆராய்ந்து பார்]
காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்:
"அணங்குஉடைப் பனித்துறைத் தொண்டி அன்ன
மணம்கமழ் பொழில்குறி நல்கினள் நுடங்குஇடைப்
பொங்குஅரி பரந்த உண்கண்
அம்கலுழ் மேனி அசைஇயல் எமக்கே"
எனவரும்.
[அசையும் இடை, அரிபரந்த உண்கண், அழகுஒழுகும் மேனி, தளர்ந்த இயல் இவற்றை உடைய தலைவி, தெய்வம் தங்கும் குளிர்ந்த துறையை உடைய தொண்டி என்ற ஊரைப் போல நறுமணங்கமழும் பொழிற்கண் எனக்குக் குறிவாய்ப்ப அருளினாள்.]
பாங்கி முன்னுறு புணர்ச்சி முறை உறக் கூறல்:
"நறுந்தண் கூந்தல் குறுந்தொடி மடந்தை
சிறுமுதுக் குறைவி ஆயினள் பெரிதுஎன
நின்எதிர் கிளத்தலும் அஞ்சுவல் எனக்குஎன
இன்உயிர் அன்னள் ஆயினும்
தன்உறு விழுமம் காத்த லானே".
எனவரும்.
[தண்கூந்தலாளாகிய குறுந்தொடி மடந்தை எனக்கு உயிர் போலச் சிறந்தனளாயினும் தனக்குவந்த துயரத்தைத்தானே காத்துக் கோடலான், இளமையிலேயே பேரறிவு படைத்துவிட்டாள் என்பதை உன்னிடம் கூறுதற்கு அஞ்சுகிறேன்.
|
|
|
|