ஆங்கு அவன் கையுறை புகழ்தல்:
"வில்லும் பிறையும் திறையிடும் வாள்நுதல் மெல்லியலாய்
எல்லும் குமுத மலரும்கண் டால்இருங் கோங்குஅரும்பும்
வல்லும் பொருத வனமுலைக்கு ஆன மணிஇதுபேர்
சொல்லும் பொழுது பிரமனும் மாலும் தொழத்தகுமே".
[வில்லையும் பிறையையும் ஒத்த நுதலாய்! குமுதம் கண்டால் மலரும் எனத்தக்க ஒளியுடையதாய், பிரமனும் மாலும் போற்றத்தக்க இம்மணி, கோங்கரும்பும் வில்லும் ஒத்த தலைவியின் வனமுலைக்கு வனப்புத் தருவதாகும்.]
"ஆரத் தழைஅராப் பூண்டுஅம் பலத்துஅன லாடிஅன்பர்க்கு
ஆரத் தழைஅன்பு அருளிநின் றோன்சென்ற மாமலயத்து
ஆரத் தழைஅண்ணல் தந்தா லிவைஅவள் அல்குல்கண்டால்
ஆர்அத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே".
[அண்ணலே! பாம்பு பூண்டு அம்பலத்தில் அனல்ஆடி அடியார் தமக்கு மிக்கஅன்பு அருளும் சிவபெருமானுடைய மலையமலையின் சந்தனத் தழையை நீ தர, அதனைத் தலைவி உடுப்பதைக் கண்டால், அத்தழை கொடுத்தவர் யாவர் என்ற ஐயுறவு ஏற்பட்டுவிடும்]
ஆற்றா நெஞ்சினோடு அவன்புலத்தல்:
"கடுந்தேர் ஏறியும் காலில் சென்றும்
கொடுங்கழி மருங்கின் அடம்பமலர் கொய்தும்
49
|
|
|
|