388                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

   ஈசன சாந்தும் எருக்கும் அணிந்துஓர் கிழிபிடித்துப்
   பாய்சின மாஎன ஏறுவர் சீறூர் பனைமடலே".

திருக்கோவை. 74 

 எனவரும்.

     [வேற்கண் வலைப்பட்டு உள்ளமாகிய மீனை இழந்தவர்கள்
 சிவபெருமான் பூசும் சாம்பலைப் பூசி, எருக்கமாலை அணிந்து, தம்
 மனத்தைக் கொண்டவளது வடிவத்தை ஒரு துணியில் எழுதிப்
 பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையை ஏறிச் சீறூர்க்கண் மடல் ஊர்வர்.]

    "மாஎன மடலும் ஊர்ப பூஎனக்
     குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
     மறுகில் ஆர்க்கவும் படுப
     பிறிதும் ஆகுப காமம்காழ்க் கொளினே".

குறுந் 17 

 இதுவும் அது.

     பிறிதும் ஆகுப என்றது வரைபாய்தலை.

     [காமம் மிகுவதாயின், அவர்கள் மா என்று சொல்லி மடல்ஏறி,
 எருக்கங்கண்ணி சூடி ஊரவர் ஆரவாரிக்கப் பனைமடல்மா ஊர்ந்து
 வருவதோடு, வரைபாய்தலுக்கும் உளம் கொள்வர்.]

     மடலேற்றினைத் தலைமகன் தன்மேல்வைத்துச் சாற்றல்:

 "கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான்
  கிழிஒன்ற நாடி எழுதிக்கைக் கொண்டுஎன் பிறவிகெட்டுஇன்று
  அழிகின்றது ஆக்கிய தாள்அம் பலவன் கயிலைஅந்தேன்
  பொழிகின்ற சாரல்நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே".

திருக்கோவை. 76 

 எனவும்,