பாங்கி அருளியல் கிளத்தல்:
"நடன்நாம் வணங்கும்தொல் லோன்எல்லை நான்முகன் மால்அறியாக்
கடனாம் உருவத்து அரன்தில்லை மல்லல்கண் ஆர்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடு ஒண்சேவலும் முட்டையும் கட்டழித்து
மடல்நாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே."
[கூத்தனாய் நாம் வணங்கும் தொல்லோனாய், நான்முகன் மால் ஆகியோர் அறியாவடிவனாகிய சிவபெருமானின் தில்லையிலே மடல்மா அமைப்பதற்குப் பறவைகளும் முட்டைகளும் செறிந்து இருக்கும் பனைமரத்தை வெட்டினால், அவற்றிற்கு ஊறு நிகழும் ஆதலின், அஃது அருளுடையாருக்கு இயைவது அன்றாம்.]
"ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத்திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய்ச் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர்தில்லைக்
கார்வாய் குழலிக்கு உன் ஆதரவுஓதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரின்அறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே."
இறந்துபடுவானை இச்சொல் தாங்கிக்கொண்டு நின்றமையின், கொண்டுநிலை ஆயிற்று.
[வெற்பனே! நீ மடல் ஊரினும் ஊர்க; விடுப்பினும் விடுக்க; உன் கருத்தை மாற்ற யாம் விரும்புகிலம். தில்லையிலே உள்ள தலைவிக்கு உன்விருப்பத்தை எடுத்து உரைக்கிறேன். அவள் அதனை நிறைவேற்ற உடன்படுதலும் ஆம்; அதனை அறிந்தபின் நீ மடல்ஊர்தல் பற்றித் திட்டமிட்டுச் செயற்படுக.] |
|
|
|