அகத்திணையியல்-நூற்பா-137                              391


 

     தலைவி இளமைத்தன்மை பாங்கி தலைவற்கு உணர்த்தல்:

 "உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்ஒளியே
  பெருகு தலைச்சென்று நின்றோன்பெருந்துறைப் பிள்ளைகள்ஆர்
  முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா
  ஒருகு தலைச்சின் மழலைக்குஎன் னோஐய ஓதுவதே".

                                               திருக்கோவை. 104  

 எனவும்,

     [உருகும் அடியார்தம் உள்ளத்தும் அம்பலத்தும் ஒளிமிக ஆடும்
 சிவபெருமானின் பெருந்துறை என்ற நகரைச் சார்ந்த தலைவிக்குத்
 தலைமயிர் கூட்டி முடிக்கும் அளவிற்கு இன்னும் வளரவில்லை; நகில்களும்
 முகம்செய்யவில்லை. அவ்வாறான இளையாளாகிய தலைவிக்கு யான்சென்று
 ஓதும் செய்தி உண்டோ?]

     தலைவன் தலைவி வருந்தியவண்ணம் உரைத்தல்:

 "அளைதாழ் அரவும் அரியும்வெந் தீயும் அரசும்இங்ஙன்
  இளைதா யினும்கொல்லும் என்பது நீவந்து இருஞ்சுரும்பின்
  கிளைதாழ் குழல்வஞ்சி கேட்டிலை யோஇளங் கிள்ளைமென்சொல்
  முளைவாள் நகைப்பெண் அரசுஅல்லவோ அந்த மொய்குழலே".

                                                     அம்பி. 126  

 எனவும்,

     [வண்டுகள் படியும் குழலைஉடைய வஞ்சியே! பாம்பும், சிங்கமும்,
 நெருப்பும் அரசும் இளைய ஆயினும் கொன்று விடும் ஆற்றல்உடையன
 என்பதை நீ அறியாயோ? கிள்ளை மொழி வெண்பல் தலைவி பெண்அரசு
 அல்லளோ? அவள் வாட்டும் திறம் சிறிதோ?]

     பாங்கி தலைவி செவ்விஅருமை செப்பல்:

 "கற்றில கண்டுஅன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்
  பெற்றிலமென் பிணைபேச்சுப் பெறாகிள்ளை பிள்ளைஇன்றொன்று