அகத்திணையியல்-நூற்பா-137                              393


 

     [ஆலிலையில் கண்வளரும் திருமால் உலகை இடந்தும் காண இயலாது,
 பின் தொண்டுசெய்து காணும் கழலோனாகிய சிவபெருமானின் தில்லையைச்
 சார்ந்த வண்டு ஒலிக்கும் பூந்துறைவ! என்னை மறைப்பின் நீ கருதியது
 முடிக்கும் முறைமை இல்லைபோலும்!]

     அந்நகை பொறாது அவன் புலம்பல்:

 "மத்தகம் சேர்தனி நோக்கினன் வாக்குஇறந்து ஊறுஅமுதே
  ஒத்துஅகம் சேர்ந்துஎன்னை உய்யநின் றோன்தில்லை ஒத்துஇலங்கு
  முத்துஅகம் சேர்மென் நகைப்பெருந் தோளி முகம்மதியின்
  வித்தகம் சேர்மெல்லென் நோக்கம்அன் றோஎன் விழுத்துணையே".

திருக்கோவை. 106  

 எனவும் வரும். பெருந்தோளி-அண்மைவிளி.

     [நெற்றிக்கண்ணனாய்ச் சொல்லும் அளவைக் கடந்து ஊறும்
 அமுதம்போல என் உள்ளத்துச் சேர்ந்து என்னை ஆட்கொண்ட
 சிவபெருமானுடைய தில்லையை ஒத்து ஒளி வீசும் பற்களை உடைய
 பெருந்தோளி ஆகிய தோழி! நின் முகமாகிய மதியின்கண் உண்டாகிய
 சதுரப்பாட்டினை உடைய கருணைப் பார்வையே இன்று எனக்குச்
 சிறந்ததுணையாகும்.]

     பாங்கி தலைமகனைத் தேற்றல்:

 "எனக்குஆவி நின்னை வருத்திய மான்அவ் விளங்குஇழையாள்
  தனக்குஆவி யானும் தடமலை நாட தளைஅவிழ்பூஞ்
  சினைக்காவில் நீகொய்ததேமென் தழையும் சிலம்பில் அந்தண்
  சுனைக்காவி யும்கரு கத்துவ ளேல்இறை சோரநின்றே".

அம்பி. 231  

 எனவும்,

    50