சுறவுஆர் கொடிஉயர்த் தோன்தொண்டை மான்கப்பல் சூழ்திருநாட்டு
உறைவார் தமக்குஇது வும்தகு மோசொல்லு ஒண்ணுதலே
[தோழி! உலகில் மீனக்கொடியை உயர்த்த தொண்டைமானது கப்பலைச் சூழ்ந்த நாட்டில் இதுவரை ஏற்படாத பழி ஒன்று நமக்கு ஏற்படுவதுபோலும். நமக்கு இத்தகைய பழி தருவதா? சொல்லுவாயாக]
பாங்கி என்னை மறைப்பது என்எனத் தழாஅல்:
"மஞ்சுஅறி யாமின்னும் வான்அறி யாதமருந்தும்மற்றுஉன்
நெஞ்சுஅறி யாதநினைவும்உண் டோநெடு நீர்உலகில்
நஞ்சுஅறி யாஅன்பின் நல்லவர் ஊட்டினும் நாணியசெம்
பஞ்சுஅறி யாத பனிமலர்ச் சீறடிப் பைந்தொடியே"
[வஞ்சனை அறியாத தோழியர் செம்பஞ்சு தீட்டினும் மென்மையால் நாணுதலால் செம்பஞ்சே தீட்டி அறியாத மலர்ச் சீறடித் தலைவியே! மேகம்அறியாத மின்னலும், தேவர் அறியாத அமுதமும், உன்மனம்
அறியாத என்நினைவும் இவ்வுலகில் உண்டோ?]
தெவ்வரை மெய்எரிகாய்சிலை ஆண்டு என்னைஆண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி இல்லைகண் டாய்உள்ள வாறருளான்
இவ்வரை மேல்சிலம் பன்எளி தில்தந்த ஈர்ந்தழையே"
|
|
|
|