400                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     தோழி தலைமகன் குறிப்புவேறாக நெறிப்படக் கூறல்:

 மேவிஅந் தோல்உடுக் கும்தில்லை யான்பொடி மெய்யில்கையில்
 ஓவியம் தோன்றும் கிழிநின் எழில்என்று உரைஉளதால்
 தூவிஅந் தோகைஅன் னாய்என்ன பாவம்சொல் ஆடல்செய்யான்
 பாவிஅந் தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே

                                                திருக்கோவை. 88.

 எனவும்,

     [மயிலனையாய்! புலித்தோல் உடுக்கும் சிவபெருமான் பூசும்
 வெண்ணீற்றை மெய்யில்பூசி, உன்வடிவு கொண்ட துணியைக் கையில்
 கொண்டு யாருடனும் உரையாடாதிருக்கும் தலைவன் மடல்ஏறத் துணிந்து
 விட்டான் போலும்! என்ன பாவம்! பெரிதும் இரங்கத் தக்கான்.]

     தோழி தலைவியை முனிதல்:

 "உள்ளப் படுவன உள்ளி உரைத்தக் கவர்க்குஉரைத்து
  மெள்ளப் படிறு துணிதுணி யேல்இது வேண்டுவல்யான்
  கள்ளப் படிறர்க்கு அருளா அரன்தில்லை காணலர்போல்
  கொள்ளப் படாது மறப்பது அறிவுஇல்என் கூற்றுக்களே"

                                                திருக்கோவை. 87.

 எனவும்,

     [கள்ளமனத்தவர்க்கு அருளாத சிவபெருமானுடைய தில்லையைத்
 தரிசிக்காதவர் சொற்கள் கொள்ளத் தகாதன ஆவது போல அறிவுஅற்ற
 என்சொற்களைக் கொள்ளாது மறந்து, நினைக்கத் தக்கனவற்றை நீயே
 நினைத்து, உரையாடத்தக்க மேம்பட்ட தோழியரோடு உரையாடி நீ பொய்
 என்று கருதிய இதனை மெள்ளத் துணிவாயாக]

     தலைவி பாங்கி தன்னை முனிதல்:

 "வாளாது வந்துஎனை வந்தன சொல்லி மணிவரைவேய்த்
  தோளாய் புலந்து துயர்வதுஎன் னோதொன்று தொட்டுவந்துஇந்