[செம்பஞ்சு ஊட்டிய அடிகளைஉடைய, சிவபெருமான் தில்லையை
ஒப்பாய்! உன்தோள் அழகுக்கு உடைந்த மூங்கில்களிலிருந்து தெறித்த
முத்துக்கள் பருக்கைக் கற்களைப் போல உன் அடிகளுக்குத் துன்பம்
தரும் ஆதலின் நீ என்னுடன் வருதல் வேண்டா; இங்கேயே நில்; யான்
அப்பக்கம் சென்று உன் நீண்ட கூந்தலில் சூட்டுதற்கு ஆகும் வண்டு
மொய்க்கும் நறுமண மலர்களைக் கொய்து உன்னிடம் வந்து சேருகிறேன்.]