அகத்திணையியல்-நூற்பா-137                              405


 

     புகழ்தல்:

 "மயனார் விதித்தன்ன மாமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பில்
  பயனார் பயோதரப் பாவைஅன் னீர்பசும் பொன்குழைதோய்
  நயனார விந்தத்து நஞ்சமும் வாய்இதழ் நல்அமுதும்
  அயனார் படைத்தில ரேல்அடங் காதுஅவ் வரனுக்குமே"

                                                     தஞ்சை. 135

 எனவும்,

     [சிறந்த மதிலை உடைய தஞ்சைமன்னன் மலையில் உள்ள பாவை
 அன்னீர்! குழை அளவு நீண்ட கண்களில் நஞ்சினைப் படைத்த பிரமன்
 உங்கள் வாய்இதழில் அமுதத்தைப் படைக்காது விட்டால், உங்கள்
 கண்நஞ்சும் சிவபெருமானும் தாங்குதல் இயலாது.]

     தலைமகளைத் தலைமகன் விடுத்தல்:

 "கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்
  எழுந்துஆர் மதிக்கம லம்எழில் தந்தென இப்பிறப்பில்
  அழுந்தா வகைஎனை ஆண்டவன் சிற்றம் பலம்அனையாய்
  செழுந்தாது அவிழ்பொழில் ஆயத்துச் சேர்க திருத்தகவே.

                                                திருக்கோவை. 124

 எனவும் வரும்.

     [இப்பிறவியில் அழுந்தாது என்னை ஆண்டவனது சிற்றம்பலம் அனைய
 தலைவியே! விண் ஆகிய நீர்நிலையில் விண்மீன்களாகிய  மொட்டுக்
 களுக்கும் மேகங்களாகிய இலைகளுக்கும் நடுவில் சந்திரனாகிய தாமரை
 அழகுற அமைவது போலச் சோலையில் உள்ள உன்தோழியர் கூட்டத்தைச்
 சென்று அடைவாயாக.]

     இன்னும் "அற்றமில் சிறப்பின்" என்றதனால், தலைவி சோர்தலும்
 கொள்க: