அகத்திணையியல்-நூற்பா-140                              413


 

ஒருசார் பகற்குறியின் வகை

 512 இரங்கல் வன்புறை இற்செறிப்பு உணர்த்தல் என்று
     ஒருங்குமூ வகைத்து ஒருசார் பகற்குறி.

     இஃது ஒருசார்பகற்குறி வகை இத்துணைத்து என்கின்றது.

    இ-ள் இரங்கலும் வன்புறையும் இல்செறிப்பு உணர்த்தலும் என மூன்று
 வகையினை உடைத்து ஒருகூற்றுப் பகற்குறி என்றவாறு.               140

விளக்கம்

     இரங்கல்-தலைவி மனம் வருந்துதல்.

     வன்புறை-தோழி தலைவியை வருந்தாதவாறு வற்புறுத்துதல்.

     இற்செறிப்பு உணர்த்தல்-தோழி தலைவனுக்குத் தலைவி இல்
 செறிக்கப்பட்ட செய்தியைத் தெரிவித்தல்."

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்-                                                      ந. அ. 153

    "புல்லென் றிரங்கல்வன் புறைசெறிப்பு உணர்த்தலென்று
     ஒல்லுதல் மூவகைத்து ஒருசார் பகற்குறி".

140

ஒருசார் பகற்குறியின் விரி

 513 கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலைஅம்
     பொழுதுகண்டு இரங்கலும்1 பாங்கி புலம்பலும்2
     தலைவன் நீடத் தலைவி வருந்தலும்3
     தலைவியைப் பாங்கி கழறலும்4 தலைவி
     முன்னிலைப் புறமொழி மொழிதலும்5 இன்னுயிர்ப்
     பாங்கியொடு பகர்தலும்6 பாங்கிஅச் சுறுத்தலும்7
     நீங்கற்கு அருமை தலைவிநினைந்து இரங்கலும்8
     தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றலும்9