அகத்திணையியல்-நூற்பா-141                              415


 

 9 தலைவிக்குத் தலைவன் வந்துகொண்டிருக்கும் செய்தியைப் பாங்கி
    குறிப்பிடுதல்.

 10 தலைவன் வெளிப்புறத்தே நிற்ப, தலைவியை வீட்டின்கண் செறித்த
    செய்தியைப் பாங்கி  கிளி முதலியவற்றிற்குக் கூறுவாள்போல அவனுக்கு
    அறிவித்தல்.

 11 தலைவன் முன்னே நிற்பவும் தோழி அவனை நோக்கிக் கூறாமல்,
    வண்டினை நோக்கிக்  கூறுவாள் போன்று, இற்செறிப்பை அவனுக்கு
    அறிவித்தல்

 12 பாங்கி தலைவன்முன்னே நின்று தலைவியைச் செவிலி வீட்டில்
    செறித்த செய்தியைக் குறிப்பிடுதல்.

 13 தலைவன்முன் நின்று தோழி தலைவியைப் பாதுகாக்க வேண்டும்
    என்று அவனை  வேண்டுதல்.

 14 தலைவன் தன்துயர் நீக்கப் பற்றுக்கோடின்றி மனத்துடனே
    கூறி்க்கொண்டு வருந்துதல்.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும் -                                         ந. அ. 154

    "பூங்கொடி மாலையம் பொழுதுகண்டு இரங்கலும்
     பாங்கி புலம்பலும் பார்த்திபன் நீடக்
     காரிகை வருந்தலும் பாங்கி கழறலும்
     மொய்குழல் முன்னிலைப் புறமொழி மொழிதலும்
     பையரவு அல்குல் பாங்கியொடு பகர்தலும்
     பாங்கிஅச் சுறுத்தலும் நீங்கற்கு அருமை
     இறைவி நினைந்து இரங்கலும் இறைவிக்கு அவன்வரல்
     பிறைநுதல் பாங்கி உரைத்தபின் பெயர்த்தும்
     சிறைப்புற மாகச் செறிப்புஅறி வுறுத்தலும்
     முன்னிலைப் புறமொழி பாங்கி மொழிதலும்