முன்னின்று உணர்த்தலும் ஓம்படை மொழிதலும்
தளர்ந்த நெஞ்சமொடு தஞ்சம் பெறாஅது
விளம்பல்ஈ ரேழ்ஒரு சார்பகற் குறிவிரி"
கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுது கண்டு இரங்கல்:
"பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற்று அற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்குஅரி யோன்எவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழில் சேக்கைகள் நோக்கினவால்
அகல்ஓங்கு இருகழி வாய்க்கொழு மீன்உண்ட அன்னங்களே".
[கதிரவன் மறைந்து விட்டான். என்னைக் காக்கும் தலைவரும தூரத்திலுள்ளார். பற்றற்ற அடியாருக்குப் புகலிடமாய், தன்னை வந்து அடைந்தார். நீங்குதல் இலராய் எல்லோராலும் விரும்பத் தகுபவராயுள்ள சிவபெருமானுடைய தில்லைப்பொழிலில் உள்ள தத்தம் கூடுகளை நோக்கி, உப்பங்கழிகளில் இரைதேடிய அன்னங்கள் புகத் தொடங்கிவிட்டன]
பாங்கி புலம்பல்:
"பொன்னார் நறுமலர்ப் புன்னையங் கானல் புளினம்தங்கி
பன்னாள் மணந்து மறந்தவர் போல அருக்கன்சென்ற
பின்னா அதன்முன்ன மேசெக்கர் மாலை பிறந்ததுஇனி
என்னாகும் என்றறி யேன்வளங் கோதை இளங்கொடிக்கே".
எனவும்,
[புன்னையங்கானலில் மணற்குன்றில் ஒளிவீசிப் பல நாளும் நம்மைக்கூடி இப்பொழுது மறந்தவர் புலப்படாமல் இருப்பது போலக் கதிரவன் புலப்படாது போனதை ஒட்டிச் செந்நிறமாலை தோன்றிவிட்டது. இப்பொழுது தலைவிக்கு என்ன நிலை ஏற்படுமோ என்று அறியேன்.]
|
|
|
|