[மூவல் என்ற ஊரில் கோயில்கொண்டுள்ள தில்லைப் பெருமானுடைய
கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தவர் உறங்கத் தொடங்கிவிட்டனர்.
சேவலைத் தழுவி உறங்காநின்ற பெண் அன்னம் யான் துயிலாத துயரத்தை
என்னைக் காக்கும் பொறுப்புடைய தலைவருக்கு உரைப்பதாக இல்லையே.]
"சிறந்தார் தெரிந்தசெழுந்தமிழ் வாணன்தென் மாறைவெற்பர்
துறந்தார் எனைஎன்று சொல்லுவது ஏன்இந்தத் தொல்உலகில்
பிறந்தார் எவர்க்கும் பிரிவுஉள தால்வெய்ய பேர்அமர்க்கண்
புறம்தாழ் கரிய குழல்செய்ய வாய்ஐய பூங்கொடியே."
[பூங்கொடியே! தமிழ்வாணன் தென்மாறை வெற்பர் உன்னைத்
துறந்துவிட்டார் என்று நீ சொல்லுவது ஏன்? இவ்வுலகில் பிறந்தவர்
எல்லோருக்கும் பிரிவு உண்டு என்பதை நீ அறியாயோ.]
தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல்:
"யாவதும் அறிகிலர் கழறு வோரே
தாய்இல் முட்டை போல உள்கிடந்து
53