அகத்திணையியல்-நூற்பா எண்-143                         425


 

     "மன்னனைக் குறிவரல் விலக்கலும் மின்இடைக்
     கோதையைப் பாங்கி குறிவரல் விலக்கலும்
     ஆடுஇடம் நோக்கி ஆயிழை அயர்தலும்
     ஆடுஇடம் விடுத்துக்கொண்டு அகறலும் பின்னாள்
     நீடுநினைந்து இரங்கலும் நிறைபொறை வழுவா
     அண்ணல் வறுங்களம் நண்ணி மறுகலும்
     ஒண்ணுதல் வாழும் ஊரினை நோக்கி
     மதிமயங் கலும்என வகுத்தஓ ரேழும்
     விதிமுறை பகற்குறி இடையீட்டு விரியே."

மா. அ. 48 

     இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்:

    "வடிவுஆர் வயல்தில்லை யோன்மலை யத்துநின் றும்வருதேன்
     கடிவார் களிவணடு நின்றுஅலர் தூற்றப் பெருங்கணியார்
     நொடிவார் நமக்குஇனி நோதகயான் நுமக்குஎன் உரைக்கேன்
     தடிவார் தினைஎமர் காவேம் பெருமஇத் தணபுனமே."

திரு. 139 

 எனவும்,

     [பெரும! தில்லையான்மலையத்து நின்றும் தேன்நாடிவரும் வண்டு தன்
 அலர்களில் மொய்க்குமாறு வேங்கை பூத்துத் தினை கொய்யவேண்டிய
 காலத்தை அறிவியாநின்றது. அச்செயல் நமக்குத் துன்பம் தருவதாயிற்று.
 எமர் தினையைக்கொய்து விடுவர்; யாமும் இனிப்  புனம் காவேம். நுமக்கு
 யான் என்ன கூறல் வல்லேன்?]

     பாங்கி இறைவியைக் குறிவரல் விலக்கல்:

     அதுநாம் அறிந்திலம் அன்னை இப்போதுஅணி நீர்த்துவரைத்
     துதிநாவலர் புகழும்தொண்டைமான் வெற்பில்தோள்மெலிவும்
     புதுநாள் மதிநுதல் வண்ணமும் பார்த்துப் புகைஉயிர்த்தாள்
     இதுநாம் இனிஅன்ன மேவண்டல் ஆடும் இடம்அல்லவே.

கப்பல். 136 

 எனவும்,

      54