426                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [அன்னமே! துவராபதியில் நாவலர்புகழவாழும்தொண்டைமான்
 மலையிலே அன்னை  இப்போது உன்தோள்மெலிவும் நுதல்வண்ணமும
 பார்த்து அனல்மூச்சுவிட்டாள். இனி நமக்கு இப்பொழில் விளையாட்டிடம்
 ஆகாது, அன்னை கருதியதை நாம் அறியோம்.]

     இறைமகள் ஆடுஇடம் நோக்கி அழிதல்:

 "பரிவுசெய்து ஆண்டுஅம் பலத்துப் பயில்வோன பரங்குன்றின்வாய்
  அருவிசெய் தாழ்புனத்து ஐவனம் கொய்யவும் இவ்வனத்தே
  பிரிவுசெய் தால்அரி தேகொள்கை பேயொடும் என்னும்பெற்றி
  இருவிசெய் தாளின்இருந்துஇன்று காட்டும் இளங்கிளியே"

திரு. 144 

     [அன்போடு நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானுடைய பரங்குன்றில
 அருவிநீர் பாயும்  புனத்தில் மலைநெல்லைக் கொய்த பின்னரும், "பேயோடு
 பழகினாலும் பிரிதல் அரிது" என்பதைக்  காட்டுவனபோல, நெல் கொய்த
 அரிதாளில் இன்றும் கிளிகள் தங்கியுள்ளன.]

 எனவும்,

     பாங்கி ஆடுஇடம் விடுத்துக்கொண்டு அகறல்:

 "கணியார் கருத்துஇன்று முற்றிற்று யாம்சென்றும் கார்ப்புனமே
  மணிஆர் பொழில்காள் மறத்திர்கண்டீர் மன்னும் அம்பலத்தோன்
  அணியார் கயிலை மயில்காள் அயில்வேல் ஒருவர்வந்தால்
  துணியா தனதுணிந் தார்என்னும் நீர்மைகள் சொல்லுமினே."

திரு. 145 

 எனவும் வரும்.

     [புனமே! பொழில்களே! அம்பலத்தான் கயிலை மயில்களே!
 வேங்கையின் எண்ணம்  ஈடேறிவிட்டது. யாம் வீட்டிற்குப் போகிறோம்.
 தலைவர் வந்தால் துணியக் கூடாத பிரிதலைத்துணிந்து சென்றுவிட்டனர்"
  என்று எம்பெற்றிகளை அவருக்குக் கூறுங்கள்.]

     பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கல்:

 "பொதுவிளில் தீர்த்துஎன்னை ஆண்டோன் புலியூர் அரன்பொருப்பே
  இதுஎனில் என்என்று இருக்கின்ற வாறுஎம் இரும்பொழிலே