[மனமே! ஆனந்தக்கடலாய் நடமாடும் சிவபெருமானுடைய  சிற்றம்பலத்தை ஒத்த தலைவி   வாழும் தேன்கூடுகள் செறிந்த  மலையகத்துச் சீறூர் இது எனினும், யான் செய்யத்தக்க செயல் ஒன்றுமில்லை.  வானத்திலுள்ள சந்திரனைத் தான் பெறல் வேண்டும் என்று விரும்பி அழும்   குழந்தையைப் போல, நானும் தளர்ந்தேன்; நீயும் தளர்ந்தாய்.]
  
     இவற்றுள் முன்னைய இரண்டும் விலக்கற்கும், பாங்கி ஆடுஇடம்  விடுத்துக்கொண்டு அகறல்   ஆகிய ஒன்றும் சேறற்கும், ஏனைய நான்கும்  கலக்கத்துக்கும் உரியவாம் என்றவாறு. உரையிற்   கோடலான், பாங்கிஆடு  இடம் விடுத்துக்கொண்டு அகன்ற பின்னர், அவன் உருவு வெளிப்பட  இரங்கலும் வரப்பெறும். அதற்குச் செய்யுள்:
  
     அழியும் இரும்புன மும்அழி யாமணல் ஆழிதொட்ட 
     சுழியும் மறிந்த இதணமும் பார்த்துத் துணைவிழிநீர் 
     பொழிய இருந்து புலம்பும்என் ஆவியும் பாவிஎம்மூர் 
     வழியும் அறிந்துஇங் ஙனேவந்த வாஎம் உழைவள்ளலே. 	
  
அம்பி. 186  
     ["புனம் அழிய, சுழி மறிய, விழிநீர் பொழியப் புலம்பும் என்  ஆவிநிலை பார்த்துத்   தலைவன் எம் ஊர்வழி வினவிவந்துள்ளானோ?"  என்று தலைவி தலைவன்உருவெளி கண்டு  சொற்றது.]
 
 516	வேண்டல்1 மறுத்தல்2 உடன்படல்3 கூட்டல்4 
     கூடல்5 பாராட்டல்6 பாங்கில் கூட்டல்7 
     உயங்கல்8 நீங்கல்9 என்று ஒன்பது வகைத்தே 
     இயம்பிப் போந்த இரவுக் குறியே. 
  
     இது நிறுத்தமுறையானே இரவுக்குறிவகை இத்துணைத்து என்கின்றது.  |  
 
  |  
  
							 | 
						 
					 
				 |