[மனமே! ஆனந்தக்கடலாய் நடமாடும் சிவபெருமானுடைய சிற்றம்பலத்தை ஒத்த தலைவி வாழும் தேன்கூடுகள் செறிந்த மலையகத்துச் சீறூர் இது எனினும், யான் செய்யத்தக்க செயல் ஒன்றுமில்லை. வானத்திலுள்ள சந்திரனைத் தான் பெறல் வேண்டும் என்று விரும்பி அழும் குழந்தையைப் போல, நானும் தளர்ந்தேன்; நீயும் தளர்ந்தாய்.]
இவற்றுள் முன்னைய இரண்டும் விலக்கற்கும், பாங்கி ஆடுஇடம் விடுத்துக்கொண்டு அகறல் ஆகிய ஒன்றும் சேறற்கும், ஏனைய நான்கும் கலக்கத்துக்கும் உரியவாம் என்றவாறு. உரையிற் கோடலான், பாங்கிஆடு இடம் விடுத்துக்கொண்டு அகன்ற பின்னர், அவன் உருவு வெளிப்பட இரங்கலும் வரப்பெறும். அதற்குச் செய்யுள்:
அழியும் இரும்புன மும்அழி யாமணல் ஆழிதொட்ட
சுழியும் மறிந்த இதணமும் பார்த்துத் துணைவிழிநீர்
பொழிய இருந்து புலம்பும்என் ஆவியும் பாவிஎம்மூர்
வழியும் அறிந்துஇங் ஙனேவந்த வாஎம் உழைவள்ளலே.
அம்பி. 186
["புனம் அழிய, சுழி மறிய, விழிநீர் பொழியப் புலம்பும் என் ஆவிநிலை பார்த்துத் தலைவன் எம் ஊர்வழி வினவிவந்துள்ளானோ?" என்று தலைவி தலைவன்உருவெளி கண்டு சொற்றது.]
516 வேண்டல்1 மறுத்தல்2 உடன்படல்3 கூட்டல்4
கூடல்5 பாராட்டல்6 பாங்கில் கூட்டல்7
உயங்கல்8 நீங்கல்9 என்று ஒன்பது வகைத்தே
இயம்பிப் போந்த இரவுக் குறியே.
இது நிறுத்தமுறையானே இரவுக்குறிவகை இத்துணைத்து என்கின்றது. |
|
|
|