434                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    மான்தனக்கு இறைவன் வரவுஅறி வித்தலும்
    கொண்டுஇடம் சேறலும் குறிஉய்த்து அகறலும்
    மண்டமர்க் கடந்தோன் வந்துஎதிர்ப் படுதலும்
    இறைமகள் ஆற்றினது அருமைநினைந்து இரங்கலும்
    இறைவன் தேற்றலும் எய்தலும் புகழ்தலும்
    குலமகள் இறைவனைக் குறிவிலக் கலும்அவன்
    மெல்லியல் மடந்தையை இல்வயின் விடுத்தலும்
    காரிகைக்கு இகுளை கையுறை காட்டலும்
    இறைவியை இகுளை இல்கொண்டு ஏகலும்
    இறைவனை இகுளை வரவு விலக்கலும்
    இறைமகன் மயங்கலும் இன்னவள் துயர்நிலை
    செப்பி விடுத்தலும் திருநுதல் புணர்ந்தவன்
    நீங்கலும் என்ன நிகழ்த்துமூ வொன்பதும்
    ஈங்குஇனிது உணர்த்தும் இரவுக்குறி விரியே."

மா. அ. 50 

   "காதல் மிகவின் வாய்விடு கிளவியும்
    தோழி சிறைப்புறத்து ஏகிடு கிளவியும்
    செறிப்புஅறி வுறுத்தலும் சூள்என நினைத்தலும்
    இறப்ப நுவறலும் இருள்வர வேண்டலும்
    மறுத்தலும் நேர்தலும் குறியிடம் வகுத்தலும்
    நயப்ப மொழிதலும் அவன்வரவு உணர்த்தலும்
    குறித்துழி உய்த்தலும் பெயர்ச்சியொடு அல்குறிச்
    சிறைப்புற மாகச் செப்பலும் நோதலும்
    இறைப்புறம் ஆகிய இரவுக்குறி விரியே."

த. நெ. வி. 18 

    இறையோன் இருட்குறிவேண்டல்:

    மருந்துநம் அல்லல் பிறவிப் பிணிக்குஅம் பலத்துஅமிர்தாய்
    இருந்தனர் குன்றில்நின்று எங்கும் அருவிசென்று ஏர்திகழப்
    பொருந்தின மேகம் புதைந்துஇருள் தூங்கும் புனைஇறும்பில்
    விருந்தினன் யான்நுங்கள் சீறூர் அதனுக்கு வெள்வளையே.

திரு. 148 

 எனவும்.