மயில் போன்ற சாயலை உடைய தலைவி என் உள்ளே உள்ளாள்; மிக இருண்ட இருட்டைப் போக்கத் தலைவியின் ஒளிமுகம் எனக்கு உருவெளியாகக் காட்சி வழங்கும்; இடியைத் தடுக்க அவள் தந்த காமத்தீ என் உள்ளத்தில் உண்டு; ஆதலின் இவ்விரவிடை இந்நெறிக்கண் வருதல் எனக்கு எளிதே.]
[சிலம்பா! மேருவை வளைத்துத் திரிபுரத்தை அழித்த சிவபெருமானின் தில்லையைஒத்த உன்ஊரினர் பூசும் நறுமணப்பொருள் யாது? அவர்கள் தங்கி விளையாடும் நிழல் யாது? அவர்கள் அணிந்து வனப்புக்கொள்ளும் நறுமண மலர்கள்தாம் யாவை?]