அம்பலத்தோன் பொருந்திய தென் மலையத்திலே, இரவில் நுமர் எம்மலர் சூடி எச்சாந்து அணிந்து எந்த மரத்தின் நிழலிலே ஆடுவர்? கூறுவாயாக என்று, தோழி வினாவிய வினாவின் உட்கருத்தை உணர்ந்த தலைவன் அவளை நோக்கி அவள் நாடு பற்றி வினவியவாறு]
அவற்குத் தன்நாட்டு அணியியல் பாங்கி சாற்றல்:
பனைவளர் கைம்மாப்படாத்து அம்பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரல் பொதியின் மலைப்பொலி சாந்துஅணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும்
சினைவளர்வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும்செழும்பொழிலே.
[யானைத்தோலைப் போர்த்த சிவபெருமான் திருவடிகளைத் தேவர்கள் போற்றும் பக்கத்தைஉடைய பொதியமலைச் சந்தனத்தை அணிந்து, குவளைப்பூக்களைச்சூடி, மயில்கள் துயிலும் கிளைகளையுடைய வேங்கைமரச் சோலையே யாங்கள் ஆடும் இடமாகும்.]
பாங்கி இறைவிக்கு இறையோன் குறை அறிவுறுத்தல்:
மோட்டுஅம் கதிர்முலை பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டம் தருநம் குருமுடி வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டம் திரிசரி வாய்வரு வான்சொல்லும் மெல்லியலே.
எனவும்,
[தலைவியே! பார்வதிபங்கனாகிய சிவபெருமான் திருவடியே பணிந்து வணங்கும் தலையினைஉடைய நம்தலைவன், மேகங்கள் கூடுதலால் கண்ஒளி பயன்படாத செறிந்த இருளில், யானைகள் நடுங்கச சிங்கம் வேட்டைக்குத்திரியும் மலைப்பகுதியின் வழயே இரவுக்குறிக்கு வருவதாகக் கூறுகிறான்.]
|
|
|
|