438                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தல்:

  செழுங்கார் முழவுஅதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்
  கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல்
  முழங்குஆர் அரிமுரண் வாரணம்வேட்டைசெய்மொய்இருள்வாய்
  வழங்கா அதரின் வழங்குஎன்று மோஇன்றுஎம் வள்ளலையே.

திரு. 157 

 எனவும்,

     [மேகம்போல முழவு ஒலிக்கும் சிற்றம்பலத்தில் திருமால் மலர்இட்டு்
 அருச்சிக்கும்படி  கூத்தாடும் சிவபெருமான் கழல்களை வழிபடாதவர்போலச்
 சிங்கம் யானைகளை வேட்டையாடும்   இருள்செறிந்த மக்கள் போக்குவரத்து
 அற்ற வழியிலே நம்வள்ளலை ?வருக? என்றுகூற நம்மனம்   இசையுமா?]

     நேரிழை, பாங்கியொடு நேர்ந்து உரைத்தல்:

  ஓங்கும் ஒருவிடம் உண்டுஅம் பலத்துஉம்பர் உய்யஅன்று
  தாங்கும் ஒருவன் தடவரை வாய்த்தழங் கும்அருவி
  வீங்கும்சுனைப்புனல்வீழ்ந்து அன்று அழுங்கப்பிடித்து எடுத்து
  வாங்கு மவர்க்குஅறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே.

(திரு. 158) 

 எனவும்,

     [ஆலகாலவிடத்தை உண்டு அம்பலத்துத் தேவர் உய்யத் தாங்கும்
 சிவபெருமானுடைய   மலையிலே அருவியால் நிறைந்த புனலை உடைய
 சுனையில் விழுந்து நாம் தடுமாறிய போது   நம்மை எடுத்துக்காத்த
 தலைவனுக்கு யான் என்ன விடை கூறுவது? என்று அறியாது
 தடுமாறுகிறேன்.]

     நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தல்:

  ஏனல் பசுங்கதிர் என்றூழ்க்கு அழிய எழிலிஉன்னிக்
  கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம்பு ஆர்சிலம்பா
  யானிற்றையாமத்து நின் அருள்மேல் நிற்கல் உற்றுச்சென்றேன்
  தேன்நக்க கொன்றையன் தில்லை உறார்செல்லும் செல்லல்களே.

(திரு. 159) 

 எனவும்,