[வெப்பம் தாங்காது தினைப்பயிர் கருகிற்றாகக் குறவர்கள மழையை
வேண்டித் தெய்வத்தை வழிபட்டு ஒலிசெய்யும் மலைநாடனே! யான் இன்று
இரவில் நினக்கு இருட்குறி வேண்டித் தலைவியிடம் சென்று
சிவபெருமானுடைய தில்லையை அடையாதவர் அடையும் துன்பங்களை ஒத்த
இன்னலுடன் அவள் இசைவைப் பெற்றுள்ளேன்.]