பாங்கி தலைவியைக் குறியிடத்துக் கொண்டுசேறல்:
  
  விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீர்உடுத்த 
  மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின்றோன் மிடற்றின் 
  வண்ணக் குவளை மலர்கின் றனசின வாள்மிளிர்நின் 
  கண்ஒக்கு மேல்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே. 
  
	
     [கருங்குழலே! விண்ணுக்கு மேலாகவும் பாதலத்துக்கும் கீழாகவும்  உலகின் நடுவிலும் விரும்பித் தில்லையில் நிற்கும் சிவபெருமான  நீலகண்டத்தைப்போல மலர்ந்துள்ள குவளைப்  பூக்கள் நின்கண்களை   ஒத்துள்ளனவா? என்பதனைக் கண்டு ஒப்பிட வந்து காண்பாயாக]
  
     பாங்கி தலைவியைக் குறியிடத்து உய்த்து நீங்கல்:
  
  நந்தீ வரம்என்னும் நாரணன் நாள்மலர்க் கண்ணிற்குஎஃகம் 
  தந்துஈ வரன்புலி யூர்அனை யாய்தடங் கண்கடந்த 
  இந்தீ வரம்இவை காண்நின் இருள்சேர் குழற்குஎழில்சேர் 
  சந்துஈ வரமுறி யும்வெளி வீயும் தருகுவனே. 	
  
     ["சிவபெருமானே! வரம் தருக" என்று திருமால் தன் கண் இடந்து  அருச்சிக்க அதற்குச்  சக்கரம் வழங்கிய சிவபெருமானுடைய புலியூர்  அனையாய்! உன் கண் அழகை ஒத்த அழகுடைய   நீலமலர்கள் இவை;  உன் கூந்தலுக்கு ஏற்ற சந்தனத்தளிர்களையும் நறுமணம் மிக்க மலர்களையும்  சென்று கொய்து மீள்வேன்.]
  
     தலைவன் தலைவியைக் குறியிடத்து எதிர்ப்படுதல்:
  
  காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோன்அடைத்த 
  தாமரை இல்லின் இதழ்க்கத வம்திறந் தோதமியே 
  பாம்அரை மேகலை பற்றிச் சிலம்புஒதுக் கிப்பையவே 
  நாம்அரை யாமத்துஎன் னோவந்து வைகி நயந்ததுவே. 
 
 |  	
 
  |  
  
							 | 
						 
					 
				 |