440                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     பாங்கி தலைவியைக் குறியிடத்துக் கொண்டுசேறல்:

  விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீர்உடுத்த
  மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின்றோன் மிடற்றின்
  வண்ணக் குவளை மலர்கின் றனசின வாள்மிளிர்நின்
  கண்ஒக்கு மேல்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே.

 எனவும்,

திரு. 162 

     [கருங்குழலே! விண்ணுக்கு மேலாகவும் பாதலத்துக்கும் கீழாகவும்
 உலகின் நடுவிலும் விரும்பித் தில்லையில் நிற்கும் சிவபெருமான
 நீலகண்டத்தைப்போல மலர்ந்துள்ள குவளைப்  பூக்கள் நின்கண்களை
 ஒத்துள்ளனவா? என்பதனைக் கண்டு ஒப்பிட வந்து காண்பாயாக]

     பாங்கி தலைவியைக் குறியிடத்து உய்த்து நீங்கல்:

  நந்தீ வரம்என்னும் நாரணன் நாள்மலர்க் கண்ணிற்குஎஃகம்
  தந்துஈ வரன்புலி யூர்அனை யாய்தடங் கண்கடந்த
  இந்தீ வரம்இவை காண்நின் இருள்சேர் குழற்குஎழில்சேர்
  சந்துஈ வரமுறி யும்வெளி வீயும் தருகுவனே.

திரு. 163 

 எனவும்,

     ["சிவபெருமானே! வரம் தருக" என்று திருமால் தன் கண் இடந்து
 அருச்சிக்க அதற்குச்  சக்கரம் வழங்கிய சிவபெருமானுடைய புலியூர்
 அனையாய்! உன் கண் அழகை ஒத்த அழகுடைய   நீலமலர்கள் இவை;
 உன் கூந்தலுக்கு ஏற்ற சந்தனத்தளிர்களையும் நறுமணம் மிக்க மலர்களையும்
 சென்று கொய்து மீள்வேன்.]

     தலைவன் தலைவியைக் குறியிடத்து எதிர்ப்படுதல்:

  காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோன்அடைத்த
  தாமரை இல்லின் இதழ்க்கத வம்திறந் தோதமியே
  பாம்அரை மேகலை பற்றிச் சிலம்புஒதுக் கிப்பையவே
  நாம்அரை யாமத்துஎன் னோவந்து வைகி நயந்ததுவே.

 எனவும்,                                                திரு. 164