அகத்திணையியல்-நூற்பா எண்-145                         441


 

     [மன்மதனை அழித்த சிவபெருமான் தில்லையிலே சூரியன் அடைத்த
 உம் இல்லாகிய   தாமரையின் கதவுகளைச் சூரியனே திறப்பதன் முன்
 நீங்களே திறந்துகொண்டு வந்துவிட்டீர்களா?   மேகலையை ஒலியாமல்
 பிடித்துக்கொண்டு சிலம்புகளை அசையாதபடி மேலே கடுக்கி  அஞ்சத்தக்க
 அரையாமத்தில் ஈண்டுவந்து தங்கி விரும்பியது யாதோ? கூறுவீராக.]
 [நாம் முன்னிலையைத் தன்மையாகக் கூறியது.]

     தலைவி ஆற்றினது அருமை நினைந்து இரங்கல்:

     பெயல்கால் மறைத்தலின் விசும்புகா ணலரே
     நீர்பரந்து ஒழுகலின் நிலம்கா ணலரே
     எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
     பல்லோர் துஞ்சும் பால்நாள் கங்குல்
     யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
     வேங்கை கமழும்எம் சிறுகுடி
     யாங்குஅறிந் தனையோ நோகோ யானே.
                                                     குறுந். 355

 எனவும்,

     [வெற்ப! மழையால் வானமும் புலப்படவில்லை. நீர் ஓடுவதால்
 தரையும் புலனாகாது.   கதிரவன் மறைந்ததால் இருளும் மிகுதியும்
 பரவிவிட்டது. பலரும் உறங்கும் இப்பாதிஇரவு  இருட்டில் நீ எவ்வாறு்
 நடந்துவந்தாய்? வேங்கை மணக்கும் எம் ஊரை எவ்வாறு அறிந்தாய்?
 நீ பட்டுள்ள துன்பத்தை நினைத்து யான் வருந்துகிறேன்.]

     புரவலன் தேற்றல்:

  மேகம் சிறந்த குழல்நிழல் ஓடிய வேல்நெடுங்கண்
  மாகம் சிறந்த மதிநுத லாய்மல்கும் அல்குலுக்கும்

      56