அகத்திணையியல்-நூற்பா எண்-145                         443


 

          புகழ்தல்:

  அழுந்தேன் நரகத்து யான்என்று இருப்பவந்து ஆண்டுகொண்ட
  செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப் புறவில் செறுஅகத்த
  கொழுந்தேன் மலர்வாய்க்குமுதம் இவள்யான்குழுஉச்சுடர்கொண்டு
  எழுந்துஆங்கு அதுமலர்த் தும்உயர் வானத்து இளமதியே.

திரு. 166 

 எனவும்,

     [யான் நரகத்துன்பத்தில் அழுந்தாதபடி என்னைவந்து ஆட்கொண்ட
 செழுந்தேனாகிய   சிவபெருமானது தில்லையை அடுத்த காட்டில் தேன்
 வெளிப்படும் குமுத மலர் இவள். நான்   நிறமான  கிரணங்களைக்கொண்டு
 அதனை மலர்த்தும் வான்அகத்து இளமதியம் ஆவேன்.]

     தலைவி தலைவனைக் குறிவிலக்கல்:

  மூரல் கதிர்முத்த வார்முலை ஆவியின் மூழ்கநனி
  வாரற்க நீதஞ்சை வாணன்வெற் பாவய மாவழங்கும்
  வேரல் கடிய கவலையி னூடு வெயிலவற்கும்
  சாரற்கு அருமைய தாய்இருள் கூரும்நம் சாரலிலே.

தஞ்சை. 182 

 எனவும்,

     [தஞ்சை வாணன் வெற்பா! முத்துமாலை அணிந்த நகில்களாகிய
 குளத்தில் முழுக, புலி முதலியன வழங்கும் மூங்கில் வளர்ந்துள்ள
 பிளவுபட்ட வழிகளின் ஊடே, கதிரவனும் நுழைகல்லா இருள்மிக்க நம்
 மலைச்சரிவில் நீ வாரற்க]

     தலைவன் தலைவியை இல்வயின் விடுத்தல்:

 

  சுரும்புஉறு நீலம்கொய் யல்தமி நின்று துயில்பயின்மோ
  அரும்பெறல் தோழியோடு ஆயத்து நாப்பண் அமரர்ஒன்னார்