444                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

  இரும்புஉறுமாமதிள் பொன்இஞ்சிவெள்ளிப் புரிசை அன்றுஓர்
  துரும்புறச் செற்றகொற்றத்து எம்பிரான் தில்லைசூழ் பொழிற்கே.

திரு. 167 

 எனவும்,

     [திரிபுர அசுரர்களின் பொன் வெள்ளி இரும்பு மதில்களை அழித்த
 வெற்றியை உடைய   சிவபெருமானது தில்லையைச் சூழ்ந்த பொழிற்கண்
 தனியே நின்று நீலப்பூக்களைக் கொய்து   கொண்டுஇராதே. உன் பெறற்கரிய
 தோழியோடு சென்று தோழியர் கூட்டத்திடையே உறக்கம் கொள்வாயாக.]

     பாங்கி இறைவியை எய்திக் கையுறை காட்டல்:

  செஞ்சேல் பொருகுழை சேர்க்கும் குவளையும் தேன்இரங்கும்
  மஞ்சுஏர் குழற்குஅணி மவ்வலும் கொய்தனன் வந்தனன்முன்
  அஞ்சேல் அரிவைஅஞ் சேல்அடி யேன்விட்டு அகன்றதற்கு
  நெஞ்சே பட்டது நீஏது பின்னை நினைத்தனையே.

அம்பி. 211 

 எனவும்,

     [அரிவை! காதுகளில் செருகும் குவளைப்பூக்களையும் வண்டுகள்
 ஒலிக்கும் கார்மேகம்போன்ற கூந்தலுக்கு அணியத் தக்க முல்லைப்
 பூக்களையும் யான் கொய்து  வந்துள்ளேன். உன்னைத் தனியே விட்டுப்
 போனதற்கு என் நெஞ்சு மிகவும் துன்பப்பட்டது. நீ யாது நினைத்தாயோ?
 அஞ்சாதே]

     பாங்கி தலைவியை இல்கொண்டு ஏகல்:

  புழைக்கால் நறுங்கு வளைச்செவ்விப் போதும் புயல்அகன்ற
  குழற்கான மவ்வலும் கொய்தனம் ஆயின் கொடியஅன்னை
  அழல்கால் விழிதுயில் நீத்துஉண ராமுன் அடைகுவம்யாம்
  கழல்கால் மதன்கணை போல்விழி யார்தம் கடிமனைக்கே.

அம்பி. 212 

 எனவும்,