உடைய கொடிபோல்வாள் ஆகிய தாமரையில் வாழும் திருமகளாகிய இத்தலைவி என் முன் நல்வினையால் யான் எய்தலாம் வண்ணம் இன்று இவ்வாறு குறமகளாக இருப்பதைக் கருதியே என்உயிர் நிலைத்துள்ளது. இவளை யான் எவ்வாறு பிரிந்து வரையுந்துணை ஆற்றியிருத்தல் கூடும்?]
தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தல்:
இடிக்கொத்து ஒளிரும் இலங்குஎயிற்று ஆளி இபமருப்பை
ஒடிக்கத் திரியும் உழுவைஅஞ் சாரல் ஒருதனியே
வடிக்கச் சுடர்வடி வேல்மன்ன நீசெல் வழிக்குஇரங்கும்
கொடிக்குப் படர்கொம்பு கூடிநின் சாரல் குறித்தகொம்பே.
[வேலவ! இடிபோல முழங்கும் ஒளிவீசும் பற்களை உடைய யாளிகள் யானைகளின் மருப்புக்களை ஒடிப்பதற்கு அவற்றைத் தேடித் திரியும் சாரலிலே நீ திரும்பிப்போம் வழி கருதி வருந்தும் தலைவியது துயர்நீங்க, நீ உன் ஊர் சேர்ந்தவுடன் உன் ஊதுகொம்பினை ஊதி ஏதமின்றிச் சேர்ந்ததைக் குறிப்பிடுவாயாக.]
திருமகள் புணர்ந்தவன் சேறல்:
இருங்குன்று அன்னமதில் எம்பதிக்கு ஏகல் எளிதுசெம்மை
தரும்குங்குமமுலைத்தையல் நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில்
கருங்குஞ் சரஇனம் வெண்சிங்க ஏறுஅஞ்சும் கங்குலில்எம்
மருங்கும் சுடர்விளக் காம்மட வார்குழை மாணிக்கமே.
[குங்கும முலைத்தோழியே! தஞ்சைவாணன் மலையிலே யானைகள் ஆண்சிங்கத்திற்கு அஞ்சும் இரவிலே, எனக்கு உருவெளியாகக் காட்சி வழங்கும் தலைவி அணிந்துள்ள
|
|
|
|