அகத்திணையியல்-நூற்பா எண்-145                         447


 

 குழையில் உள்ள மணிகள் நல்ல வெளிச்சத்தை எனக்கு நாற்புறமும்
 வழங்கும் ஆதலின்,   மலைபோன்ற மதில்களை உடைய எம்ஊருக்குச
 செல்லுதல் எனக்கு மிகஎளியசெயலே.]

     உரையிற் கோடலால், தலைமகன் நெறியினது எளிமை கூறலின்
 பின் பாங்கி இரவுக்குறிக்கு உடன்படலும், நேராது இறைவி நெஞ்சொடு
 கிளத்தலின்பின் பாங்கி இரவுக்குறி ஏற்பித்தலும், தலைவியைக் குறியிடத்து
 எதிர்ப்படுதலின் பின் சார்தல் பயனாகப் புகழ்தலும் வரப்பெறும்.

     பாங்கி இரவுக்குறிக்கு உடன்படல்:

  கூளி நிறைக்கநின்று அம்பலத் தாடி குரைகழற்கீழ்த்
  தூளி நிறைத்த சுடர்முடி யோய்இவள் தோள்நசையால்
  ஆளி நிறைத்து அடல் ஆனைகள் தேரும் இரவின்வந்து
  மீளி உரைத்தி விளையேன் உரைப்பதுஎன் மெல்லியற்கே.

திரு. 151 

 எனவும்,

     [கூத்தின் சுவையால் பேய்களும் போகாது நிறைந்து நிற்க அம்பலத்து
 ஆடுவான்  திருவடிக்கண் உண்டாகிய தூளிபடிந்த சுடர்முடியோய்! ஆளிகள்
 வரிசையாகக் கூடியானைகளைத் தேடும் இரவின்கண் வந்து மீளுதலைச்
 சொல்கின்றாய்! யான் தலைவியிடம் இதனுக்கு உடன்படுவாய் என்பேனோ?
 உடன்படாது ஒழிவாய் என்பேனோ?]

     பாங்கி இரவுக்குறி ஏற்பித்தல்:

  மலவன் குரம்பையை மாற்றிஅம் மால்முதல் வானர்க்குஅப்பால்
  செலஅன்பர்க்கு ஓக்குமசிவன்தில்லைக் கானலில்சீர்ப்பெடையோடு
  அலவன் பயில்வது கண்டுஅஞர் கூர்ந்துஅயில் வேல்உரவோன்
  செலஅந்தி வாய்க்கண் டனன்என்ன தாம்கொல்மன் சேர்துயிலே.

திரு. 155 

 எனவும்,