அகத்திணையியல்-நூற்பா எண்-146,147                      451


 

     அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்."

தொல். பொ. 111 

    "ஆற்றது தீமையும் அறிவுறு கலக்கமும்
     காப்பின் கடுமை கையற வரினும்
     களனும் பொழுதும் வரைநிலை விலக்கி."

114 

    "அல்லகுறிப் படுதலும் அவ்வயின் உரித்தே
     அவன்வரவு அறியும் குறிப்பி னான."

இறை. அக. 17 

     முழுதும் -                                                      ந. அ. 159  

    "எல்லுக்குறி இடையீடு இருவகைத்து அவைதாம்
     அல்லகுறி வருந்தொழிற்கு அருமைஎன்று ஆகும்."

மா. அ. 51 

146 

இரவுக்குறி இடையீட்டு விரி  

 519 இறைவிக்கு இகுளை இறைவரவு உணர்த்துழித்
     தான்குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும்1
     பாங்கி தலைவன் தீங்குஎடுத்து இயம்பலும்2
     புலந்துஅவன் போதலும்3 புலர்ந்தபின் வறுங்களம்
     தலைவிகண்டு இரங்கலும்4 தன்துணைக்கு உரைத்தலும்5
     தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும்6
     இறைவன்மேல் பாங்கி குறிபிழைப்பு ஏற்றலும்7
     இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றலும்8
     அவள்குறி மருண்டமை அவள்அவற்கு இயம்பலும்9
     அவன்மொழிக் கொடுமைசென்று அவள் அவட்கியம்பலும்10
     என்பிழைப்பு அன்றுஎன இறைமகள் நோதலும்11
     தாயும்12 நாயும்13 ஊரும்துஞ்14 சாமையும்
     காவலர் கடுகலும்15 நிலவுவெளிப் படுதலும்16
     கூகை குழறலும்17 கோழிகுரல் காட்டலும்18
     ஆகிய கிளவி அப்பதி னெட்டும்
     இரவுக் குறிஇடை யீட்டது விரியே